தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சோதனை
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவரின் பதவிக் காலத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்தது தொடர்பாக ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதாவது, மின்மாற்றிகளை வாங்கியதில் கூட்டுச் சதி மற்றும் சந்தை விலையை விட அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது என்பதே குற்றச்சாட்டாகும். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஏப்.29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் சிபிஐ விசாரணை என்பது உறுதியானது. நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவானது, டான்ஜெட்கோ முன்னாள் அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.
தற்போது மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதற்கு விடப்பட்ட 9 டெண்டர்களில் ரூ.1028 கோடி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 19) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் அண்ணாநகர், பெருங்குடி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
மின்வாரிய டெண்டர்களில் ஊழல்: 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (5)
Raghavan - chennai,இந்தியா
19 ஆக்,2026 - 14:51 Report Abuse
0
0
Reply
Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா
19 ஆக்,2026 - 13:28 Report Abuse
இதற்கு முந்தய ஆட்சியிலும்சரி தற்போதைய ஆட்சியிலும்சரி இதுவரை நடந்த சோதனைகளின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? எததனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது யாருக்காவது தெரியுமா? 0
0
Vasan - ,இந்தியா
19 ஆக்,2026 - 14:42Report Abuse
Yes, they should a dashboard for this. 0
0
Reply
Aarbinms - Bangalorw,இந்தியா
19 ஆக்,2026 - 13:20 Report Abuse
முதல்ல திருத்த பட வேண்டியது நீதி மற்றும் சட்ட துறை 0
0
Reply
sridhar - chennai,இந்தியா
19 ஆக்,2026 - 12:26 Report Abuse
லஞ்ச ஒழிப்பு துறை இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கட்டும்.. இறுதியில் நீதிமன்றம் தான் முடிவு செய்யும் குற்றம் நிரூபிக்கப்பட்டதா என்று.. எனக்கு என்னமோ இதெல்லாம் ஏதோ நாங்க மட்டும் தான் ஊழலை ஒழிக்க வந்ததாக சொல்லிக்கொள்வதற்கு விளம்பரமாக மட்டுமே பயன்படும் என தோணுகிறது 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement