தமிழகத்துக்காகவே மேகதாது அணை; ஆசை காட்டுகிறார் கர்நாடக முதல்வர்
-நமது நிருபர்-
தமிழகத்துக்காகவே மேகதாது அணை; கர்நாடகாவுக்காக அல்ல என கர்நாடகா முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.
தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''தண்ணீரை விட முக்கியமான வளம் எதுவும் இல்லை. தண்ணீர் நம்மை ஒருங்கிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக்கூடாது. மேகதாது அணை திட்டம், கர்நாடகாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் முக்கியமானது.
இந்த திட்டத்தின் ஒவ்வொரு துளி தண்ணீரும் தமிழகம், புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு உதவும் என நான் உறுதி அளிக்கிறேன். இந்த திட்டத்தை நிறைவேற்ற எங்களுக்கு உதவுங்கள் என்றார்.
பின், அவர் அளித்த பேட்டி: தென்மண்டல குழு கூட்டம் சிறப்பாக நடந்தது. கூட்டத்தில், அனைத்து தென் மாநிலங்களின் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தோம்.
1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை தொடர வேண்டும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்தோம்.
இந்த விவகாரத்தில், தமிழகம், கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உட்பட பெரும்பாலான மாநிலங்கள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் உள்ளன. மேலும், நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக, தனியே ஒரு கூட்டத்தை நடத்தி, சுமுகமான தீர்வுகளை காண கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேகதாது அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கான, 5 டி.எம்.சி., நீரை தவிர்த்து, மீதமுள்ள தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு திறந்து விடப் படும். தமிழகத்துக்காகவே மேகதாது அணை; கர்நாடகாவுக்காக அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
அய்யா, உங்க ஆளுங்க சும்மாவே தண்ணி திறக்க ஸ்ட்ரிக்கே பண்ணுறாங்க.
இந்த அழகுல நீங்க ஆயிர கணக்கான கோடி போட்டு தமிழ்நாட்டுக்காக அணை கட்டி அவங்களுக்கு தண்ணி குடுக்க போறீங்களா?
மேகதாது அணை கட்டப்பட்டால், ஆண்டு முழுவதும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வரும் என கர்நாடக முதல்வர் கூறுகிறாரா?
கூறுவார். ஆனால் அமல் படுத்த மாட்டார். அமல் படுத்த விட மாட்டார்கள்..
He can sell this pitch to TVK .Maybe this is the sales pitch of congress from Karnataka and Kerala .
இதற்க்கு முன்னிருந்த தற்குறிக்கைகளைவிட நல்லாவே நடக்கும்
5 TMC போக அனைத்தும் தமிழகத்திக்கு என்பது பொய் ஆகா இருக்கலாம். அதிலிருந்து பாசனம் பெரும் நிலம் கண்டிக்ப்பாக இருக்கும். அவர் வருகின்ற முழு நீரும் அவருடைதாக பாவித்து கொண்டிருக்கிறார். தானாக வரும் உபரி நீரை தமிழகத்திக்கு என்று சொல்லுவது தெரிகிறது. அணையின் கட்டுமானம் 5 TMC கொள்ளவாக இருக்காது அதிகமாக இருக்கும்.
இப்போ தமிழக மக்களை யார் ஏமமாத்துறாங்கன்னு புரியலையே
ஒருத்தன ஏமாத்தனும்னா முதல்ல அவனோட ஆசையை தூண்டனும்.
mektatu is a trojan horse.TN will be at karnataka's mercy for water.Mektatuu is the last valve on kaveri keeping delta on the tender hooks.
இப்படி ஆசைவார்த்தை காட்டித்தான் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி அணைகளை கட்டி நம்மை கையேந்த வைத்தனர். மீண்டும் ஆசை வார்த்தை காட்டி இனி குடிக்கக்கூட இவனிடம் கையேந்தவைக்க பார்க்கிறான். இங்குள்ள தற்குறிகள் என்ன செய்யப்போகிறது என பொறுத்திருந்து பாப்போம்.
இதை அப்படியே கர்நாடக மக்களிடம் கூறி பிரசாரம் செய்து ஓட்டுக் கேளுங்க. பிரமாத ரிசல்ட் கிடைக்கும்.மேலும்
-
புகையிலை விற்ற வாலிபர் கைது
-
காலிமனையை கிரயம் செய்து தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி தந்தை, மகன்கள் மீது வழக்கு பதிவு
-
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பிற்கு உத்தரவு ஆக.,29ல் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்
-
ஹாக்கி, கோ கோ போட்டி வெற்றி பெற்ற பள்ளிகள்
-
முகாசபரூரில் ரத்ததான முகாம்
-
சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்