புகையிலை விற்ற வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் புகையிலை விற்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப்–இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று மந்தக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். இங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த கமலா நகரை சேர்ந்த கோபிநாத் மகன் சுமன்,19; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 18 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement