ஆறு மாதங்களை நெருங்கும் போர்; ஈரான் ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்

3


வாஷிங்டன்: போர் ஆறு மாத காலத்தை நெருங்கும் நிலையில், ஈரான் ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் விரும்புகிறது. ஆனால், என் கருத்துப்படி, அவர்கள் சரியான ஒப்பந்தத்தைச் செய்யத் தயாராக இல்லை; அவர்களிடம் பணம் இல்லை, கடற்படை இல்லை, விமானப்படை இல்லை. அவர்கள் தங்கள் வீரர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை, போலீசாருக்கு ஊதியம் வழங்குவதில்லை. அங்கு பணவீக்கம் அதிகமாக உள்ளது. எனவே, என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கப் போகிறோம்.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது; இந்தக் கட்டுப்பாடு அதன் உள்பகுதிகளான நிலப்பரப்புகள் வரை நீண்டுள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவுடனான போர் ஒருநாள் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்தார்.

அவர், "நாம் வலிமையாகவும், கவுரவமாகவும் இருக்கும் இந்த வேளையிலேயே, போரை இன்றே முடிவுக்குக் கொண்டுவருவது சிறந்தது. முழு உலகமும் நமது வெற்றியை அங்கீகரித்து, அனைத்து விதிமுறைகளையும் மீறி அமெரிக்கா நமது பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்கி, உலகெங்கிலும் வெறுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்த வேண்டும்," என தெரிவித்தார்.

கிட்டத்தட்ட மோதல் ஆறு மாத காலத்தை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்கானும், ஈரானும் ஒருவரையொருவர் வென்று விட முடியும் என்று தொடர்ந்து பந்தயம் கட்டி வருகின்றன. அமெரிக்க ராணுவம், மாலுமிகள் மற்றும் கடற்படையினர் மீது அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement