மாமரத்தை கவாத்து செய்யணும்
மதுரை: ''தரமான பழங்களுடன் அதிக மகசூல் பெற மா மரத்தை கவாத்து செய்ய வேண்டும்'' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அருள்மணி தெரிவித்தார்.
மா மரத்தின் ரகம், தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து, நீர்மேலாண்மை, மண்வளம், பராமரிப்பு காரணிகளைப் பொறுத்து விளைச்சல் மாறுபடும். மா சாகுபடியில் உயர் விளைச்சல் பெற கவாத்து செய்வது அவசியம்.
மரத்தில் காணப்படும் நோய், பூச்சி தாக்கிய கிளைகள், குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகள், முறுக்கிப் பிணைந்த கிளைகள், அடிமட்டத்தில் உள்ள தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்துவதே கவாத்து செய்வதன் நோக்கம். இதன் மூலம் சூரியஒளி, காற்றோட்டம் மரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.
கவாத்து செய்யும் போது மாமரங்களுக்கு குறிப்பிட்ட வடிவமைப்பு தருவதுடன் எளிதாக உரமிடல், இதர பண்ணை பணிகளை செய்ய முடியும். அறுவடை முடிந்த பிறகு ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை கவாத்து மேற்கொள்ளலாம்.
கவாத்து செய்யும் போது மொத்த கிளைகளில் 25 சதவீதத்திற்கு மேல் வெட்டக்கூடாது. வெட்டப்பட்ட இடங்களில் உள்ள காயத்திற்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தை 0.3 சதவீதம் தெளிக்க வேண்டும். போதுமான ஊட்டச்சத்துகள், தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும்.
கவாத்து செய்தபின் புதிய தளிர்கள் உருவாகி அதிகளவு பூக்கள் பூக்கும். காய் பிடிப்பு திறன் அதிகரிப்பதோடு பூச்சி, நோய் தாக்குதல் குறையும். மகசூலின் தரம், அளவு கணிசமாக அதிகரிக்கும்.
மேலும்
-
ஜவுளி சந்தை வர்த்தக இலக்கு 33.50 லட்சம் கோடி ரூபாய் மத்திய ஜவுளி துறை கமிஷனர் தகவல்
-
கொடிசியாவில் நாளை வரை 'எலக்ட்ரோடெக்' கண்காட்சி
-
ரூ.1.26 கோடி நிதி திரட்டியது 'வேளாண் மார்ட்'
-
சரக்கு கையாள்வதில் சிக்கல்களுக்கு தீர்வு துாத்துக்குடி துறைமுக அதிகாரி பேச்சு
-
மூன்றில் ஒரு கால்நடைக்கு அடர்தீவனம் கிடைக்கவில்லை 37 சதவிகிதம் பற்றாக்குறையால் புதிய சவால்
-
நாடு முழுதும் வீடு விலை 6 சதவீதம் உயர்வு