பாலியல் வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி கொடுக்க முயன்றாரா பஞ்சாப் முதல்வரின் மனைவி?
சண்டிகர்: பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை முடித்து வைக்க, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர், 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் குற்றஞ்சாட்டியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை முடித்து வைக்க, முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர், 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, ஓய்வு பெற்ற பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங், சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
இது, அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இது குறித்து புகார் அளித்த, 'லீகல் ரைட்ஸ் அப்சர்வேட்டரி' என்ற அமைப்பு, 'இது போன்ற தலையீடுகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியம், பாதுகாப்பு, நியாயமான விசாரணை மற்றும் நீதி பெறும் உரிமையை சமரசம் செய்து விடும்' என, கவலை தெரிவித்தது.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் கமிஷன், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, இரு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, பஞ்சாப் அரசு தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளது. இது, முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
@block_B@
நோட்டீஸ் அனுப்பிய குர்ப்ரீத் கவுர்
தன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சித் சிங்குக்கு முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நோட்டீஸ் கிடைத்த, 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கும்படியும், தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.block_B
வாசகர் கருத்து (8)
ராஜ் - ,
23 ஆக்,2026 - 19:32 Report Abuse
இந்த முறை மாங்காய் கட்சியான AAP க்கு பணம் காய்க்கும் மரம் பஞ்சாப் விழ்த்த படும் 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
23 ஆக்,2026 - 16:32 Report Abuse
கொடுக்க முயன்றபோது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் பிடித்து கொடுத்திருக்கலாம்.இவ்வளவு காலம் ஏன் காத்திருக்கவ்வெண்டும்? 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
23 ஆக்,2026 - 12:46 Report Abuse
பிஜேபி எந்த எல்லைக்கும் செல்லும் ஜெயிக்க, நீதிபதி இவ்வளவு நாள் தூங்கிட்டு இருந்தாராம், பிஜேபி இப்போசொல்லி இருக்கும் நீதியை பொய் சொல்ல 0
0
sankar - Nellai,இந்தியா
23 ஆக்,2026 - 13:25Report Abuse
தவறு செய்தவனை விட்டுவிட்டு வேறு எவனையோ ஏசுவதே திராவிடம் 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
23 ஆக்,2026 - 12:10 Report Abuse
பஞ்சாப்ல தேர்தல் வரணுமே >> அட .... ஆமா .... 2027 பிப்ரவரியில் வரணும் ... அதுக்கென்ன இப்ப >> இல்ல .... சும்மா கேட்டேன் .... 0
0
Reply
INDIAN - ,
23 ஆக்,2026 - 11:19 Report Abuse
The judge was in COMA for the past few years. first arrest this judge and review all his verdict 0
0
raman - chennai,இந்தியா
23 ஆக்,2026 - 13:05Report Abuse
you want the rapist and corruptionist CMs wife to escape, but the judge who brought to light the corruption to be punished 0
0
Reply
GMM - KA,இந்தியா
23 ஆக்,2026 - 09:55 Report Abuse
ஆம் ஆத்மி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கால் பதிக்கும் ஊர் உறங்காது. குற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும். பல வழக்குகளை முடித்து வைக்க மன்றத்தில் பலர் லஞ்சம் பெறுவதுண்டு. 0
0
Reply
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
Advertisement
Advertisement