தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி: தமிழகத்துக்கு நீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை? இது குறித்து மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு முறையிடலாம் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வக்கீல் சி.எஸ்.வைத்யநாதன் வாதிடுகையில், ''தமிழகத்திற்கு வர வேண்டிய உரிய பங்கு நீர் கிடைக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளின் படி நீர் திறந்துவிடப்பட வேண்டும். நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள், செயல்பாடுகள் குறித்து தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்; அணைகளில் நீர்வரத்து சேமிப்பை ஆய்வு செய்து, உரிய காலத்தில் நீரைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது'' என தெரிவித்தார்.
கர்நாடகா தரப்பில் ஆஜரான வக்கீல் ஷியாம் திவான் வாதிடுகையில், ''காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நீர்ப்பங்கீட்டில் எந்த பெரிய பிரச்னையும் இல்லை'' என்றார்.
இதையடுத்து சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* கடந்த விசாரணையின் போது திறந்துவிடப்பட்ட நீர் குறித்த விவரம் அடங்கிய வரைபடத்தை கர்நாடகம் சமர்ப்பித்தது.
* தற்போதைய சூழல் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு தரப்பும் புதிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
* தமிழகத்துக்கு நீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை? இது குறித்து மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு முறையிடலாம். இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிறகு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இத்தகைய வழக்குகளை ஒத்தி வைக்காமல் உடனுக்குடன் தீர்ப்பு வழங்குவதில் நீதிமன்றங்களுக்கு என்ன தடை ? நீதிமன்றங்கள் ஒத்திவைக்க வைக்க உரியவர்களுக்கு தண்ணீர் மற்றும் நீதியும் வேளாவேளைக்கு கிடைப்பதில்லை . காலம் கடந்து கிடைக்கும் நீதி கிடைக்காத நீதி க்கு இணை என்கிறது பழமொழி JUSTICE DELAYED IS JUSTICE DENIED
உண்மையில் தில் இருந்தால் உச்சநீதிமன்றம் வட்டாள் நாகராஜை அழைத்து விசாரணை நடத்தி இந்த கேள்விக்கு பதில் வாங்க வேண்டும்
எதற்கெடுத்தாலும் மாநில உரிமை எனப் பேசும் மாநிலங்களுக்கு மற்றவர் கஷ்டம் புரியவே வாய்ப்பில்லை.
If karnataka releases water the politicians in TN and karnstaka will not have any election issue.They will go mad
மிக சரியான கேள்வி.. இந்த லட்சணத்தில் மேகதாது அணை கட்டினால் அவ்ளோதான்... ஒரு சொட்டு தண்ணி கிடைக்காது.. கன்னட மக்களுக்கு தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணி குடுக்கக்கூடாது..இதுதான் அவர்களின் எண்ணம்.. என்னே புத்தி..
காசே இல்லாதவன் கிட்டே கைமாத்து கேக்குற மாதிரி இருக்கு யுவர் ஆனர். நல்லா கேளுங்க.
ஏதோ அடிதடின்னு பஞ்சாயத்துக்கு போன மாதிரி கேள்வி .....
சாலைகள் மட்டுமல்ல, நதிகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை தேசிய மயமாக்க வேண்டும்.. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கொண்டு வர வேண்டும். இதை மாநில அரசுகள் செய்யமுடியாது.. மத்திய அரசுதான் செய்ய வேண்டும்.. ஆனால் என்ன செய்ய ஓர வஞ்சனை அரசியல் செய்யும் மத்திய அரசிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது
ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பினிஷிங் இல்லையேப்பா!
தண்ணீர் வழங்குவதில் அரசியல் தான் பிரச்சனை. ஒரு ஓட்டு கூட தேர்தல் முடிவை மாற்றி விடும் நூதன முறை தான் வீம்புக்கு காரணம். வெற்றியை கணிக்க முடியாத நிலையில் தேர்தல் முறை இருக்க வேண்டும்.மேலும்
-
உத்திரமேரூரில் சேதமடைந்த தெரு பெயர் பலகைகள்; புதிதாக அமைக்க மக்கள் கோரிக்கை
-
அரசு பள்ளியில் பல்லி கிடந்த உணவு விநியோகம்; மயக்கமடைந்த 19 மாணவ - மாணவியர் 'அட்மிட்' ; பதறி ஓடிய பெற்றோர்; திணறிப்போன ஆசிரியர்கள்
-
செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநில சிறுவர்கள் மீட்பு
-
அங்கனாமலை அம்மையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
-
இளையோர் செஞ்சிலுவை சங்கம் அரசு பள்ளியில் தொடக்கம்
-
அச்சுறுத்துவது போல முதல்வர் பேசுவதா?