எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

9

மதுரை: எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருகிறது என மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

அவரது பேட்டி: வழக்கு வேறு; சட்டசபை வேறு. சட்டசபையில் மானியக் கோரிக்கை போய் கொண்டு இருக்கிறது. மானியக் கோரிக்கையில் என்ன பண்ண வேண்டுமோ, அதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். தேவையில்லாத வார்த்தைகளை அவர்கள் பேசும் போது தான், அதற்கான பதிலை நாம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.



கோபம் வருது




ஏதாவது விஷயங்களில் அவர்கள் தேவையில்லாத வார்த்தைகளை பேசும் போது, அதற்கான பதிலை கொடுக்க வேண்டியது இருக்கிறது. ஊழல்னு சொன்னா கோபம் வருது; மக்களுக்கு தெரியும்; Party Fundனு சொன்னா கோவம் வருது, கட்சி நிதி இல்லாமலா, இத்தனை வருடம் அரசு இருந்தது. கட்சி நிதி இல்லாமல் ஏதாவது ஒரு துறை இருந்ததா? கட்சி நிதி கொடுக்காமல் ஒரு டிரைவிங் லைசென்ஸ் வாங்கி இருக்கிறீர்களா? பிறப்புல இருந்து இறப்பு வர எந்த சர்டிபிகேட் வாங்கணும்னாலும் காசு கொடுக்காம வாங்க முடிஞ்சுதா.


விளக்கம் சொல்லுங்க




கடந்த 20 வருடமாக எத்தனை பேர் வீட்டிற்கு காசு கொடுக்காமல் அப்ரூவல் வாங்கி இருக்கிறீர்கள். அது தான் கட்சி நிதி; ஆனா இன்னைக்கு எல்லாமே மாறி இருக்கிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் வசூல் ஆகிறது என்றால் அது யாருக்கு உரிய பங்கு; மணலில் கொள்ளையடிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் வசூல் செய்த பணம் யாருக்கு போனது; கட்சி நிதி என்று சொன்னால் கோபம் வருகிறது. அதற்கான விளக்கத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும்.


பழிவாங்கலா?




ஆதாரம் இல்லாமல் எந்த வழக்கையும் தொடுக்க முடியாது. தவறு இருந்தால் கண்டிப்பாக வழக்கு தொடுக்கப்படும். மக்களுடைய வரிப்பணம் வழக்கு தொடுக்காமல் இருக்க முடியுமா? எவ்வளவு விவகாரம் நீதிமன்றம் வரை சென்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று கேட்டு இருக்கிறது.


@quote@டிரான்ஸ்பார்மர் வழக்கு 3 வருடம் நிலுவையில் இருந்துள்ளது. இவ்வளவு பெரிய ஊழல் ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேட்டு இருக்கிறது. வழக்கு எல்லாம் சும்மா போட முடியாது. இவர்களை பழிவாங்க வேண்டிய அவசியமே கிடையாது.quote

முதல்வருக்கோ, யாருக்கோ இவர்களை பழிவாங்கும் எண்ணம் கிடையாது. தேர்தலில் மக்களே இவர்களை பழிவாங்கிவிட்டார்கள். யார் என்று காட்டிவிட்டார்கள். தேர்தலுக்கு திமுக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. திமுக பாஜவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொகுதி மறுவரையறையை எதிர்த்து வாக்களிக்கிறோம் என்று இதுவரை திமுக ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement