திருவாடானை கோயிலில் முகூர்த்த நாள் கூட்டம்

திருவாடானை: ஆடி முடிந்து ஆவணி பிறந்ததால் நேற்று முகூர்த்த நாளில் கோயில்களில் கூட்டம் அதிகமானது. ஆடி மாதம் முடிந்து மூகூர்த்த நாட்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்ததையடுத்து திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கூட்டம் அதிகமானது. நேற்று ஆவணி மாதத்தில் முதல் முகூர்த்தம் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடந்தது. கோயில் முன்பும், சுற்றியும் திரளான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுமணத் தம்பதிகளின் வருகையும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வாகனங்கள் அதிகமாக இருந்ததால் முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

–––

Advertisement