குன்றத்துார் முருகன் கோவிலில் ஒரே நாளில் 60 திருமணங்கள்
குன்றத்துார்: முகூர்த்த நாளான நேற்று, குன்றத்துார் முருகன் கோவிலில், ஒரே நாளில் 60 திருமணங்கள் நடந்தன.
குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.
ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால், கோவில் வளாகத்தில் நேற்று காலை 60 திருமணங்கள் நடந்தன.
திருமண விழாவிற்கு வந்தவர்கள், பக்தர்கள் என ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் குன்றத்துார் மலை கோவில் வளாகத்திலும், அடிவாரம் பகுதியில் உள்ள சாலைகளிலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகினர்.
‘ஆவணி முதல் முகூர்த்தம் என்பதால் அதிக திருமணம் நடக்கும் என தெரிந்தும், குன்றத்துார் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என, பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு