கினியா குப்பை கிடங்கில் துயர சம்பவம்; 30 பேர் பலி

-நமது நிருபர்-




கினியா தலைநகரில் குப்பைக்கிடங்கில் கனமழை காரணமாக குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் உள்ள குப்பை கிடங்கில், திடீரென குப்பைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிகாலை 2 மணி அளவில் பெய்த கனமழை காரணமாக நிகழ்ந்துள்ளது.

குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலர் அந்த பகுதியை விட்டு வெளியேறாமல் இருந்தது தான் உயிரிழப்பு அதிகரிப்பு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement