பணக்கார நுகர்வோர் எண்ணிக்கை; 2036க்குள் சீனாவை இந்தியா முந்தும்!
நமது நிருபர்
2036க்குள் சீனாவை விட அதிகமான பொருட்களை வாங்கும் திறன் மிகுந்த நுகர்வோர் இந்தியாவில் தான் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
2036க்குள் இந்தியா பல துறைகளில் சீனாவை முந்தும் அல்லது அதற்கு நிகரான வளர்ச்சியை எட்டும் என்று ஆய்வுகள் கணிக்கின்றன. அந்த வகையில் செல்வந்த நுகர்வோர் எண்ணிக்கையில் இந்தியா முன்னேறும் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. இது நீல்சன் ஐக்யூ மற்றும் வேர்ல்ட் டேட்டா லேப் ஆகியவற்றின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாள் ஒன்றுக்கு 90 டாலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ.8,606) அதிகமாக செலவிடும் செல்வந்த நுகர்வோர் எண்ணிக்கையில் 2036ம் ஆண்டுக்குள் சீனாவை இந்தியா விஞ்சும்.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்தில் இருந்து 10 கோடியே 8 லட்சமாக உயரும். அப்போது சீனாவில் இந்த எண்ணிக்கை 10.3 கோடியாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தரம் மற்றும் வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நுகர்வோரின் வாங்கும் திறன் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. பல சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் 2036க்குள் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
அதேநேரத்தில் 2036ம் ஆண்டில் அமெரிக்காவில் 23.1 கோடி பொருட்களை வாங்கும் திறன் மிகுந்த நுகர்வோர் இருப்பார்கள். இது இந்தியா, சீனாவை விட அதிகமாகும். உலக அளவில் செல்வந்த மக்கள் தொகை 102.5 கோடியை எட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறிவிட்ட நிலையில், இளைஞர்களின் பலம் பொருளாதார வளர்சிக்கு வழிவகுக்கிறது; தற்போது இந்தியா முழுமையான பலத்தை அடைந்து, சர்வதேச அளவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி ஏத்திவிட்டே நம்மை உசுப்பேத்தி விடுகிறார்கள்
இந்த வேலை பற்றி முழுமையாக தெறியும் என்ற அடிப்படையில் சொல்கிறேன். செய்கூலி இல்லை என்று தான் ஜோய் ஆலுக்காஸ் சொல்லுகிறார்கள் சேதாரம் பற்றி யாரும் இங்கே கவனிக்கவில்லை. குறைந்த அளவாக 10% சேதாரம் என்று எடுத்துக்கொண்டாலும் ஒரு பவுனுக்கு 800 கிராம் அந்த நிறுவனத்துக்கு கிடைக்கும். அதாவது ஒரு மோதிரத்துக்கு 800g க்ஸ் ரஸ்14000 = Rs 11200 லாபம். இந்த லாபத்திலிருந்து ஒரு மோதிரத்துக்கு ரூபாய் 500 முதல் 1000 வரையே கூலி. எப்படி பார்த்தாலும் ஒரு பவுன் மோதிரத்துக்கு குறைந்த அளவிலான லாபம் ருபாய் 10000 ஜோஸ் ஆலுக்காசுக்கு கிடைக்கும். வளையல் நெக்லஸ் போன்ற நகைகளை காட்டிலும் மோதிரம் செய்ய ஆகும் நேரம் மிக குறைவே. அதுவும் இப்பொழுதெல்லாம் மோதிரம் காஸ்டிங் முறையில் தயாரித்து போலிஷ் செய்வதால் கூலி ஒரு மோதிரத்துக்கு ருபாய் 100 க்கு மேலே செல்ல வாய்ப்பில்லை.
ஆஹா.. அதுக்குள்ளே ஆளுக்கு 15 லட்சம் போட்டுருவாங்க போலிருக்கு. அப்பாவி நல்ல காலம் பொறக்குதுடா உனக்கு. இன்னும் பத்து வருசத்தில் எங்கேயோ போகப்போறேடா
ஓஷியில் வயறு வளர்க்கும் கூட்டம் எத்தனை முறை கழுவி ஊற்றினாலும் புரியாதுமேலும்
-
ஸ்ரீவீரனார் கோவிலுக்கு இடவசதி கேட்டு மனு
-
செப்.,2ம் தேதி முன்னாள் படை வீரர்கள் கூட்டம்
-
பட்டாசு ஆலைகளை திறக்க பெசோ அலுவலகம் முற்றுகை
-
விருது வழங்கல்
-
உங்கள் ஊராட்சி பகுதிக்கு --தெருவில் ஒடும் கழிவு நீர், திறந்த வெளி அவலம், ரேஷனுக்கு அலைச்சல், --சிரமத்தில் புத்துார் ஊராட்சி மக்கள்
-
மகசூல் அதிகரிக்க மரங்களைகவாத்து செய்வது அவசியம் தோட்டக்கலை துறை அறிவுறுத்தல்