அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; ராகுலிடம் அனுமதி பெற்றாரா? என பாஜ விமர்சனம்
பெங்களூரு: தொழிலதிபர் அதானியை கர்நாடகா முதல்வர் சிவகுமார் நேற்று (ஆக.,23) சந்தித்து பேசினார். அதானியை தேசிய அளவில் எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜ விமர்சித்துள்ளது.
நேற்று காலை பெங்களூருவில் உள்ள கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாரின் இல்லத்திற்கு சென்ற தொழிலதிபர் அதானி, சுமார் 30 நிமிடம் சந்தித்து பேசினார். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.22,267 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள 16.75 கி.மீ., நீளமுள்ள இரட்டைச் சுரங்கப் பாதை திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் எடுத்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
அதானியையும், மத்திய அரசையும் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்புபடுத்தி விமர்சித்து வரும் நிலையில், அதானியை சிவகுமார் சந்தித்து பேசியது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கர்நாடகாவில் அதானி குழுமம் பல்வேறு திட்டங்களை செய்து வரும் நிலையில், டிகே சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, திடீரென அதானியை சந்தித்து பேசியது காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் எழச் செய்துள்ளது.
இருப்பினும், தன்னை சந்திக்க வேண்டும் என்று அதானி நேரம் கேட்டதாகவும், மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று கூறிய முதல்வர் சிவகுமார், வேறு எதையும் விவாதிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதனிடையே, இருவரின் சந்திப்பு குறித்து பாஜ தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான அசோகா கடுமையாக விமர்சித்துள்ளார். அதானியை சந்திக்க ராகுலிடம் முதல்வர் சிவகுமார் அனுமதி பெற்று விட்டாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், தேசிய அளவில் அதானியை காங்கிரஸ் எதிர்த்து வரும் சூழலில், கர்நாடகாவில் காங்கிரஸ் அதானியுடன் கைகோர்த்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.
வாய்பேச முடியாத தெரியாத சகதியில் உழலும் பன்றிக்கு கூட மானம் ரோசம் வெட்கம் இருக்க வாய்ப்பு உண்டு ஆனா இந்த பொழுதண்ணிக்கும் பொய்பேசி திரியிற காங்கிரஸ் கட்சி தலைமை முச்சூடும் அலிபாபா நாற்பது திருடர்கள் கதை தான் அப்படியே பதியவும்.. உண்மை கசக்கத்தான் செய்யும்
இந்த போலி காந்தி குடும்பத்தினர் மோடி அவர்கள் மீதும் பிஜேபி அரசாங்கம் மீதும் ஊழல் பதி எதுவும் சுமத்த வழியில்லாத காரணத்தால் கிடைத்ததை எல்லாம் வைத்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதேபோலத்தான் கேரளாவிலும் அதானி குழுமத்திற்கு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளார்கள்.
இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் சில மூர்க்க கும்பல்கள், எதற்கெடுத்தாலும் டாடா, பிர்லா, அம்பானி மற்றும் அதானி ஆகியோர்தான் இந்த நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று வதந்தியை பரப்பி அவர்களை புழுதிவாரி தூற்றுகிறார்கள். உண்மை என்னவென்றால், இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்பி, லட்சக்கணக்கானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரங்களை உருவாக்கி, ஒழுங்காக வரிகளைச் செலுத்தி, இந்தியாவின் வளர்ச்சியில் முதலீடு செய்துள்ளன. இப்படித்தான் தமிழகத்திற்கு வரவேண்டிய அதானியின் இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் மாற்றுப் (container transshipment hub) துறைமுகம் கேரளாவில் விழிஞ்சம் என்ற இடத்திற்கு போய்விட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பெரிய சரக்குக் கப்பல்களில் உள்ள கொள்கலன்களை சிறிய கப்பல்களுக்கு மாற்றி மற்ற துறைமுகங்களுக்கு அனுப்ப உதவும் திட்டமாகும். இப்போது கேரளாவில் உள்ள இந்த விழிஞ்சம் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகச் செயல்பாடுகள், வெளிநாட்டு பயணக் கப்பல்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நவீன முனையங்கள் மற்றும் வசதிகள் கொண்ட அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் இந்த திட்டத்தை இங்குள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தேசவிரோத கிறிஸ்தவ சக்திகள் போராட்டத்தால் வரவிடாமல் செய்து விட்டார்கள். அரசு மானிய விடுதிகள், கல்லூரி மற்றும் பள்ளி வகுப்புகளில் இட ஒதுக்கீட்டில் பிழைத்து வாழும் இந்த தேசவிரோதிகள் நம்முடைய பாரதத்தைக் கட்டியெழுப்புவதல்ல, அதை அழிப்பதே அவர்களின் தெளிவான நோக்கமாகும்.மேலும்
-
பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
-
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம், பரந்துார் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு
-
அரசு மருத்துவமனையில் வென்டிலெட்டர் வெடித்ததில் 3 பச்சிளம் குழந்தைகள் பலி; மஹா.,வில் சோகம்
-
பணக்கார நுகர்வோர் எண்ணிக்கை; 2036க்குள் சீனாவை இந்தியா முந்தும்!
-
அதிக மழைப்பொழிவு எங்கே!
-
கட்டட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை