மகசூல் அதிகரிக்க மரங்களைகவாத்து செய்வது அவசியம் தோட்டக்கலை துறை அறிவுறுத்தல்

தேனி, ஆக. 25–அடுத்த ஆண்டு நல்ல மகசூல், தரமான மாம்பழங்களை பெற மாமரங்களை கவாத்து செய்யுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.

அவர் கூறியதாவது: மா பயிரில் கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவதாகும். இதனால் புதிய கிளைகள், பூ மொட்டுகள் அதிகரித்து, மகசூல்  அதிகரிக்கும். ஆக., செப்.,ல் கவாத்து செய்ய வேண்டும். குறிப்பாக நோய் தாக்கிய, காய்ந்த கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். இதனால் சூரிய வெளிச்சம், காற்றோட்டம் நன்றாக கிடைக்கும். வயதான, உற்பத்தி குறைந்த மரங்களில் 30 முதல் 40 சதவீத கிளைகளை அகற்றுவதால்  புதிய கிளைகள் உருவாகி உற்பத்தி அதிகரிக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட மாமரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 2.2 கிலோ யூரியா, 6.25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2.5 கிலோ பொட்டாஷ் உரங்களை செப்., அக்.,ல் மழைக்கு பின் இட வேண்டும். உரத்தை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து 40முதல் 90 செ.மீ., துாரத்தில் இட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Advertisement