மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை
கோவை: மின் கணக்கீடு செய்யாத மாதங்களில், முந்தைய தொகையை செலுத்தச் சொல்லும் நடைமுறையை, மின் அமைச்சர் தவறாக புரிந்துகொண்டு, மின் கணக்கீட்டாளர்கள் 'டேபிள் ஒர்க்' செய்ததாக பேசியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சருக்கு தவறான தகவல் தெரிவித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில் 3.20 கோடி இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு தொடர்ந்து வழங்குவதால், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 7,591 கணக்கீட்டாளர் பணியிடம் உள்ளது; 1,500 நபர்களே பணிபுரிகின்றனர். 6,000 பணியிடம் காலியாக இருப்பதால் ஆய்வாளர்களும் கணக்கீடு செய்கின்றனர்.
சில நேரங்களில், நிர்வாக காரணங்களால் கணக்கீடு செய்யாவிட்டால், முந்தைய மாதங்களில் செலுத்திய தொகையை கட்டச் சொல்லி மின்வாரியம் அறிவிக்கும். அடுத்தடுத்த மாதங்களில் அளவீடு செய்து, மின் கணக்கீடு சரி செய்யப்படும். சமீபத்தில் பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வந்ததாக எழுந்த புகாரால், ஜூலையில் மீண்டும் ஆய்வு செய்ததில், 0.6 சதவீதம் மட்டுமே குறை இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால், கடந்த காலங்களில் கணக்கீட்டாளர்கள் பணிக்குச் செல்லாமல் உத்தேசமாக 'டேபிள் ரீடிங்' செய்ததாகவும், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின் கணக்கீடு சரியாக நடப்பதாகவும், பல மாதமாக கணக்கெடுக்காமல் இருந்து விட்டு, இப்போது செய்ததால் கட்டணம் உயர்ந்ததாக, சட்டசபையில் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். இதற்கு பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.
சம்மேளனத்தைச் சேர்ந்த மின் கணக்கீட்டாளர்கள் கூறியதாவது: மின் வாரியத்தில் 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படும். முடியாத சூழலில், முந்தைய தொகையை செலுத்த அறிவிப்பு வெளியிடப்படும். இதை பி.எம்.சி. (previous month calculation) என கூறுவோம். இதுவே மின்வாரிய நடைமுறை.
'டேபிள் ரீடிங்' என்றால் கணக்கீடுக்கு செல்லாமல் அவரே தோராயமாக மின் கணக்கீடை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்வதாகும். 'டேபிள் ரீடிங்' என்பது தவறான விஷயம்.
பி.எம்.சி., என்பதற்கும், 'டேபிள் ரீடிங்' என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் உயரதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை மின் அமைச்சர், சட்டசபையில் பேசியது கணக்கீட்டாளர்களை மனதளவில் பாதித்துள்ளது.
கணக்கீட்டாளர் பற்றாக்குறையால், பல இடங்களில் பி.எம்.சி., முறையில் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் போடப்பட்ட மின் கணக்கையே, வெயில் காலமான ஏப்ரல், மே மாதங்களில் போடப்பட்டது. குளிர்காலத்தில் மின் உபயோகம் குறைவாக இருக்கும். கோடையில் மின்விசிறி, ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கும். வழக்கமாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மின் கட்டணம் உயர்வது வாடிக்கை. அதன்பின் ரீடிங் எடுக்கும்போது, யூனிட் வித்தியாசத்தை சேர்த்தால், ஒவ்வொருவருக்கும் அதிகமாக மின் கட்டணம் வரும்.
முந்தைய மாதங்களில் கணக்கீடு செய்தாததே காரணம் என சொல்வதற்கு பதிலாக, கணக்கீட்டாளர்கள் டேபிள் ஒர்க் செய்ததாக உயரதிகாரிகள் கூறியதை நம்பி, பேசி விட்டார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் அமைச்சர் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
தி.திராவிட ஆட்ச்சியில் சகலமும் சாத்தியமே.
பி.எம்.சி., என்பதற்கும், டேபிள் ரீடிங் என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் உயரதிகாரிகள் இப்படிச் சொல்வது வெட்கக்கேடு. இதுதான் தமிழக மின்சார வாரியத்தின் சாபக்கேடு. நாட்டில் பல்லாயிரக்கணக்கான படித்த அறிவுள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் ஆனால் சலுகைகள் மூலம் வேலை பெற்று அதனாலேயே பதவி உயர்வும் பெற்றவர்கள் இப்படித்தான் செயலாற்றுவார்கள். அவ்வப்பொழுது கருர் சம்பவம் போல நடந்தால் அரசுப் பணி தர நம் அரசுகளும் தயாராக இருக்கையில் ஆளுக்கா பஞ்சம். ஆளில்லாமல் மின் பயனீட்டுக் கணக்கை எடுப்பதுவும் சாத்தியமே பல நாடுகள் சாதித்துக் காட்டியிருக்கின்றன. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் செலுத்தும் முயற்சியைக் கைவிட்டு இது போன்ற அன்றாட வாழ்க்கைக்கு உதவும் கருவிகளைக் கண்டு பிடிக்க நம் கல்வி நிறுவனங்களும் அரசும் முயலவேண்டும் சென்னை ஐ ஐ டி செய்ய முடியாதா
மின் மீட்டர் கணக்கு எடுப்பவர்கள் யாரும் என் வீட்டுக்கு வருவதில்லை. குத்துமதிப்பாக ஒரு ரீடிங்கை அப்லோட் செய்கிறார்கள். அதெப்படி கோடை காலம் அதிகமா பில் காட்டுறோம்.
மீட்டர் கணக்காளர்களிடம் பேசியிருக்கிறீர்களா எப்போதாவது? என்ன ஏத்தம்? பில்லில் ஒரு சந்தேகம் எனக்கேட்டால் ஆபீஸ்க்கு போயி கேளுங்க
PMC க்கும் "டேபிள் ஒர்க்" என்பதற்கும் என்ன வித்தியாசம்? பெயரை மாற்றி சொல்லி விட்டால் உண்மையாக செய்வது மாறி விடுமா? ஆள் பற்றாக்குறை ஆனால் வேலையில்லா திண்டாட்டம் - எங்கோ சரியில்லையே.
தற்போது மின்வாரியம் எடுக்கும் ஒரு நடவடிக்கையும் மிகவும் சரி. தொடர்ந்து மூன்று மாதங்கள், மின்சாரம் இயக்காமல் ஓடாத மீட்டர்களை திரும்ப பெறுவது என்பதே அது.
இதுவும் உண்மை தான். இப்படி நடந்திருக்கிறது. மின்வாரியத்தில் இப்போது எப்படி என தெரியாது. ஆனால், முன்பெல்லாம் சென்றால், ஊழியர்கள் பெரும்பாலும் அலுவலகத்தில் இருக்க மாட்டார்கள்.
அனுபவம் இல்லாமை திறமை இல்லாமை இதுதான் இன்றைய அதிகாரிகளின் லட்சணம்.
ஸ்மார்ட் மீட்டர் நிறுவினால் மட்டுமே முழுமையான மாதாந்திர கணக்கீடு சாத்தியம். ஆனால் ஏதோ நோக்கத்துடன் அதற்கான டெண்டரை இழுத்தடிக்கின்றனர் .
கடும் ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் மாதாந்திர கணக்கீடு வாக்குறுதியை எப்படிக் கொடுத்தாங்கமேலும்
-
டிரைவர்களுக்கு மராத்தி கட்டாயம் என்ற விதி அமல்; மும்பையில் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் மக்கள் அவதி
-
வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து