பட்ஜெட்: சமூக நலத்துறை 

பட்ஜெட்டியில் சமூக நலத்துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 

*  மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை எளிதாக பெரும் வகையில் ஒருங்கிணைந்த இணையவழி நலத்திட்ட சேவைத் தளம் உருவாக்கப்படும். அரசு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

* அரசு பள்ளிகளில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு மதியிறுக்கம், மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். 

* மேம்பட்ட குழந்தை வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் மாற்றுத் திறன்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் கிராமங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில்  வளர்ச்சி மதிப்பீட்டு முகாம்கள், பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றும் தனிநபர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில் ‘புதுச்சேரி மாநில சமூக சேவை விருதுகள்’ வழங்கப்படும். 

* இதற்காக சமூகநலத்துறைக்கு ரூ. 132.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement