பட்ஜெட்: நில அளவை மற்றும் பதிவேடுகள்
பட்ஜெட்டியில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* இந்திய நில அளவைத் துறையுடன் இணைந்து ட்ரோன் ஆய்வு மூலம் புதுச்சேரி முழுதும் பெரிய அளவிலான நில அளவை மேற்கொள்ளபடுகிறது. இந்த நவீன மறு அளவீடு திட்டத்தின் மூலம் உயர்தர வரைபடங்கள் தயாரிக்கப்படுவதுடன், வளர்ச்சித் திட்டமிடல் மற்றும் நில மேலாண்மைக்கான வலுவான அடித்தளம் உருவாக்கப்படும்.
* நில அளவை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் தொடர்ந்து செயல்படும் குறிப்பு நிலையங்கள் நெட்வொர்க் நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகளை காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளிலும் அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், நிலப் பதிவேடுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வகையில், பயனாளியின் முன் ஒப்புதலோடு ஆதார் எண்ணை வருவாய் பதிவேடுகளுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* இதற்காக நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கு ரூ. 17. 88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
-
விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கை; உணவு வகையில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்
-
கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
-
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்
-
ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை