விமான நிலையமும் வேணும்... விவசாயமும் வேணும்; சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: ' பரந்தூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலம் திருப்பித் தரப்படுவது குறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்,' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிப்பது என்பது குழந்தையிடம் இருந்து தாயை பிடுங்குவதற்கு சமம். இந்த உலகத்தில் உள்ள எல்லா பெரிய வன்முறைகள், வளர்ச்சி என்ற வார்த்தையின் மூலம் தான் துவங்கியிருக்கும். எனவே, ஒரு நிலையான வளர்ச்சி தான் வேண்டும். விமான நிலையமும் வேண்டும். விவசாயமும் வேண்டும்.
அதற்கான இந்தப் பயணத்தில் சொன்னதை செய்தார் முதல்வர் விஜய். சுமார் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய தொல்லியல் பொக்கிஷம் கம்பன் கால்வாய் அங்கு தான் இருக்கிறது. அங்கிருந்து தான் கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் வரும். அப்படி வந்தால் தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்யும். இது ஒரு தொல்லியல் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் சங்கிலி. அதுமட்டுமில்லாமல், 1000 நாட்களைக் கடந்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பரந்தூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலம் திருப்பித் தரப்படுமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து தான் சொல்ல முடியும். விவசாயிகளுக்கு சாதகமாகவே பண்ணுவோம். அவசரப்பட்டு எதையும் நாம் சொல்லி விட முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே, அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, எளிதாக பயணிக்க நான்கு வழி சாலைகள் உள்ளன. அதே போல இரட்டை வழி ரயில் பாதைகளும் உள்ளன. இந்த பணிகளை செய்ய, நாடு முழுவதும் கையகப்படுத்திய விவசாய நிலங்கள், இடிக்கப்பட்ட கட்டிடங்கள் எத்தனை எத்தனை? இன்றைய நவீன உலகில் வளர்ச்சி இல்லாத நாடு பின் தங்கும் என்பது உறுதி
தமிழ்நாடு உங்க கிட்ட மாட்டிகொண்டு?
Just a cinematic dialogue by the minister . No value for his statement
விடுங்க பாஸ், மதுரை மற்றும் தெற்கே உள்ளவர்கள் திருவனந்தபுரம், கோவை அதை சுற்றி கொச்சின், சேலம் அதை சுற்றி பெங்களூர் போலவே வட தமிழ்நாடு மக்கள் இனி ஆந்திரா போயி இன்டர்நேஷனல் பிலைட் ஏறலாம். நாம் ஏர்போர்ட் கட்ட கல்லும் மண்ணும் இங்கிருந்து கொடுப்போம்.ஆனா நாம்தான் நம்பர் 1 கொஞ்ச நாளைக்கு .
மக்களாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்க அவர்களையே விமான நிலையத்தின் உரிமையாலற்களாக ஆக்கிவிடுங்கள்.நிலத்தை ஒப்படைப்பவர்களுக்கு வருடாந்திர ராயல்டி கொடுக்கும் முறையை அலோசியுங்கள்.
அவர்களுக்கு நிலத்தின் மூலம் வரும் வருடவருமானதை அது ஈடு கட்டவேண்டும்.அல்லது எல்லா வியாபார உரிமைகளையும் அவர்களுக்கே கொடுங்கள். அதேபோல சாலகளுக்கு நிலம் எடுக்கவேண்டுமானாலும் ,தொழிற்பெட்டைக்கு நிலம் எடுக்கவேண்டுமானாலும் அவர்களையே உரிமையாளராக அல்லது பங்குதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள் .இதை பற்றிய ஒரு ஆய்வை நடத்துங்கள் .ராயல்டி என்ற ஒரு வழிமுறை இருக்கின்றது.அதை யோசியுங்கள்.
both cannot happen at paranthur.minister has solved the problem
காடுகள் மற்றும் மலைகள் தவிர 5000 ஏக்கர் காலி இடம் தமிழ்நாட்டில் இல்லை, ஆக மறுபடியும் முதலி்ல் இருந்தா?. என பிரச்சனையை ஆரம்பிக்க போகிறார்கள் இந்த தற்குறிகள்.
ஒட்டு மொத்த தமிழ்நாடே அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நம்பி தான் அரிசிக்காக காத்திருப்பது போல.. இவ்வளவு பெரிய திட்டத்தை தடுப்பது அறிவான செயல் இல்லை
எதுக்கு சம்பந்தம் இல்லாமல் இந்த ஆளு இதை பற்றி பேசிட்டு இருக்கார்? இவருடைய துறை எதுவோ அதை பற்றி பேசலாம். திருப்பி குடுத்தா நஷ்டஈடாக கூட்டுத்த 650 கோடி யாரு அப்பன் வீட்டு பணம்??
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாதோ? இந்த மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடிதான்மேலும்
-
ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்
-
குற்றவியல் நீதிமன்ற கட்டடம் வழக்கறிஞர் சங்கம் நன்றி
-
இன்றைய நிகழ்ச்சி (27.8.2026)
-
ராமநாதபுரத்தில் நடை பாதைகள் மாயம் தினமும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கிராம சாலையை ஆக்கிரமிக்கும் முள் மரங்கள்
-
ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி