உயிர்ம வேளாண்மையில் சாதனை; விவசாயிகள் மூவருக்கு விருது வழங்கினார் முதல்வர் விஜய்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் காவல், தீயணைப்பு துறை சார்பில் ரூ.164 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். மேலும், 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதையும் அவர் வழங்கினார்.
2025 - 2026ம் ஆண்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் சார்பில் நிறைவு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.121.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்பு, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தமிழக சிறப்பு காவல் 5ம் அணியினர் வளாகம், காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகம் மற்றும் புனித தோமையார் மலை வளாங்களில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள போலீஸ் பல்பொருள் அங்காடிகள், ரூ.2.91 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள துறைமுகம் காவல்நிலையத்தையும் திறந்து வைத்தார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கோவை பீளமேடு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரூ.10.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார். அதேபோல, சேலம் செவ்வாய்ப்பேட்டை, திருச்சி சமயபுரம், நாமக்கல், பெரம்பலூர், மதுரையின் டி.கல்லுப்பட்டி, வடிப்பட்டி, சிவகங்கையின் சிங்கம்புணரி ஆகிய இடங்களில் ரூ.23.86 கோடி செலவில் புதிய தீயணைப்பு நிலைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. கோவை மேட்டுப்பாளையத்தில் 50 தீயணைப்பு பணியாளர்களுக்கான குடியிருப்பு ரூ.2.36 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ளது. இதனையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இது மக்களின் வரி பணத்தில் கட்டப்பட்டவை. இது எந்த அரசியல் கட்சிக்கும் சொந்த பணமில்லை.
முதல்வர் விஜய் சற்றும் எதிர்பாராதவிதமாக ஜாதி மதம் இனம் மொழி என்றெல்லாம் பிரிந்து நிற்காத இளைஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முதன் முறையாக வாக்குக்குப் பணம் என்றொரு நிலையில்லாமல் அதிகம் செலவும் செய்யாமல் வென்றிருக்கிறார்
"திமுகவின் பின்னடைவு என்பது வெறுமனே முந்தைய காலங்களில் ஏற்பட்ட வழக்கமான தேர்தல் தோல்விகளாகப் பார்க்கப்படவில்லை. அதன் மரபார்ந்த ஆதரவுத் தளம் நீடித்திருக்கும் என்பதற்கு இனி எந்த உத்தரவாதமும் இல்லை என்பதற்கான சமிக்ஞை" என பிபிசி சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் எப்படியாவது தவெக ஆட்சி அமைப்பதைத் தவிர்க்க அதிமுக-வின் அடிப்படைக் கொள்கையே திமுக எதிர்ப்புதான் என்னும் நிலையில், திமுகவுடன் உறவு கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்ற உண்டான தவறான அணுகுமுறையால் அதிமுக இனி ஆட்சிக்கு வருவது கடினம். திமுக தேய்ந்து போனது என்றால் அதிமுக "தீய்ந்து போனது" என்பது உண்மைதான்
பாரம்பரியமான வாக்கு சேகரிப்பு முறைகளைத் தகர்த்து, இப்படியொரு மாறுபட்ட அணுகுமுறையை அவர் கைக்கொண்டதன் மூலம் தனித்துவமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது திரு விஜெய் ஆட்சியில் இதுவரையில், நடந்த ஒரு சில சறுக்கல்களை ஒதுக்கி விட்டால், சிறப்பாகவே இருக்கிறது
செடி நட்டவன்
ஒருவன் கனி உன் பவன் ....?
உலக நியதியே அதான்மேலும்
-
ஐபிஓ,அலசல்:இஎஸ்டிஎஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன் லிமிடெட்
-
'நம்மை வளர்த்த கலையை நாம வளர்க்கணும்!'
-
உ.பி.,யில் பயிற்சி விமானம் விழுந்து 2 விமானிகள் பலி
-
உலோக துறை குறியீடு 8 சதவிகிதம் உயர்வு யார், எந்த உலோகத்தில் முதலீடு செய்யலாம்? பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'எக்சிஸ்' அறிக்கை
-
கள்ள நோட்டு கும்பல் சுற்றிவளைப்பு
-
வால்மீகீஸ்வரர் கோவிலின் 85 ஏக்கர் நிலம் மாயம்?