தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

ஆயக்குடி:பழநி ஆயக்குடி வீரலட்சுமி கோயிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயிலில் திருவிழாவை முன்னிட்டு ஆக.14ல் முகூர்த்தக்கால் நடுதல், சாமி சாட்டுதல் நடந்தது. ஆக.,26 இரவு தீர்த்தம் எடுத்து செல்லுதல், சக்தி தேங்காய் உடைத்தல், சேர்வையாட்டம் நடந்தது. அதன்பின் சுவாமி வீதிஉலா வந்தது.

நேற்று பாரம்பரிய முறைப்படி நடந்த வழிபாட்டில் கோயில் முன் பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு 'கோவிந்தா, கோவிந்தா' கோஷத்துடன் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement