லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
கன்னியாகுமாி: சமீபத்தில், அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு:
அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும், 'டிஜிட்டல்' முறையில் செலுத்த முடியும் என்கிறபோது, தற்போதைய சூழலில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு, தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பணத்திற்கு, குறிப்பிட்ட வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டால், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும். ஊழலற்ற நிர்வாகம் அமைய வேண்டுமெனில், இது போன்ற வழிகாட்டுதல்கள் உருவாக வேண்டும். இது குறித்து அரசு தரப்பில் செப்., 3ல் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கன்னியா குமரி கலெக்டர் பிரதாப் கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை, வேகமாக பரவி வருகிறது. அந்த சுற்றறிக்கையை, மாநிலம் முழுதும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அலுவலக நடைமுறையின்படி, அரசு துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கப் பணம் விபரத்தை, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து, அலுவலக தலைவரின் கையெழுத்து பெற வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும், இதை பராமரிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இப்பதிவேடு தொடர் பராமரிப்பில் இல்லை. இப்பதிவேட்டை பராமரிக்க, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரிவோர், ஒவ்வொரு நாளும் தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கப்பணத்தை பதிவு செய்ய, பிரத்யேகமான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்
இது வருகை பதிவேட்டுடன், அலுவலக தலைவர் ஒப்புதல் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும்
இப்பதிவேட்டை மேல் அதிகாரிகள், மாதம் இரு முறை ஆய்வு செய்ய வேண்டும்
அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும், தேவைக்கு அதிகமான ரொக்கத்தை கையிருப்பாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். இப்பதிவேட்டை பராமரிக்காத அலுவலகத்தில், அதன் தலைவர், கண்காணிப்பாளர், வருகை பதிவேட்டை பராமரிக்கும் பணியாளர் ஆகியோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூமுட்டைகள் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இதை பின்பற்ற பட வேண்டும் என்றால் கீழ் மட்ட துப்புரவு பணியாளர்கள் பெற்றோர் அதிகாரிகளின் பினாமி ஆவார்கள் என்று தெரியாதா... இப்போவே எவன் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குறானுவோவ்..எல்லாமே இரவு ஏழு மணிக்கு மேல் ஒரு பொதுவான இடத்துக்கு வர சொல்லி வாங்குறானுவோ இல்லை வீட்டில் இல்லை பினாமியிடம் லஞ்சம் கொடுச்சாச்சி என்று போன் வந்தபிறகு அடுத்த நாளில் கையெழுத்து ஆகும்...
நம் அரசு அலுவலர்கள் இதற்கும் ஒரு வழி கண்டு பிடித்து விடுவார்கள்
லஞ்சத்தை அடியோடு ஒழிப்பது எந்த நாளும் இயலாத செயல் ஆனால் குறைக்க முடியும் கொடுப்பவர் இருந்தால்தான் வாங்குபவர் இருக்க வாய்ப்புண்டு மக்கள் அவசர அவசரமாக ஒரு பொருளை/வசதியைப் பெற குறுக்கு வழியில் முயற்சிக்காமல் இருந்தால் லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ வாய்ப்பு இல்லாமல் போகும் அடுத்து எங்குமே தனி ம்னித தலையீடு இல்லாமல் முறையான ஆவணங்களை பதிவிட்டால், கட்டணத்தைச் செலுத்தினால் போதும் நாம் விரும்பிய பணி நிறைவேறும் என்பது போன்ற நிலை, மேலை நாடுகள் போல முறையான கணிணி மயமாக்காலால் சாதிக்க முடியும் நம் நாட்டில் கணிணி முறையென்பது பதிவேற்றப் பணிகளை மட்டுமே செய்கிறது சரிபார்ப்புப் பணிகள், அனுமதி அளிப்பது போன்ற பணிகளை மனிதர்கள் தான் செய்கிறார்கள் மனிதத் தலையீடு இருக்கும்வரை லஞ்சம் குறையாது குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு நிரூப்பிக்கப்பட்டால் கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் மேல்முறையீடு கருணை மனு இவை பெறும் வாய்ப்பு அரிதாக நியாயமான வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் கீழாண்மை நீதிமன்றத் தீர்ப்பு தவறென மேலாண்மை நீதிமன்றம் உறுதி செய்தால் கீழாண்மை நீதிமன்ற நீதிபதியை தாற்காலிகப் பதவி நீக்கம் செய்து அவர் தீர்ப்பு கொடுத்ததன் பின்னணி அறியப்பட வேண்டும் இவையெல்லாம் நடப்பது கடினம் என்றாலும் நம்புவோம் நடக்கும்
ஒருவருக்கு நியாயமான ஒரு வேலையை செய்து கொடுக்க வில்லை. ஒருநாளில் முடிய வேண்டிய வேலையை ஒரு வாரம் அலையவிட்டால் மக்கள் என்ன செய்வார்கள். ஏன் செய்து கொடுக்கவில்லை என்று யாரவது கேட்கிறார்களா? மக்கள் என்ன செய்வார்கள். பணத்துக்காகத்தானே அந்த வேலை இழுத்தடிக்கப்படுகிறது, அதை ஏன் மனதில் கொள்ளவில்லை?
This register should be digital so that time cannot be changed. Otherwise all will collide and write the register only in the eveningமேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி