மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!

3


-நமது நிருபர்-




ஜெய்ப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கியூபாவைச் சேர்ந்த ஜோனா உரங்கா, 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026'க்கான பட்டத்தை வென்றார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026ம் ஆண்டுக்கான மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டி நடந்தது. உலகெங்கிலும் உள்ள 13 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த புகழ்பெற்ற சர்வதேச அழகுப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கியூபா நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னா உராங்கா வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார். நமீபியாவின் சாண்டல் போரன் முதல் ரன்னர் அப்பாகவும், பராகுவேயின் கியுலியானா ஒகாரிஸ் இரண்டாம் ரன்னர் அப்பாகவும், அமெரிக்காவின் ஆண்ட்ரியா அல்மெஸ்டிகா 3வது ரன்னர் அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


@block_P@

கனவு நனவானது!

வெற்றிப்பெற்ற கியூபா நாட்டின் அழகி ஜோனா உரங்கா கூறியதாவது: நான் இதற்காக 3 வருடங்களுக்கும் மேலாக தயாராகி வந்தேன். உண்மையை சொல்ல போனால் எனது கடின உழைப்பு எல்லாவற்றிற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. இது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும், அது இப்போது நனவாகியுள்ளது. இவ்வாறு ஜோனா உரங்கா கூறினார்.block_P

Advertisement