மழை வேண்டி நுாதன வழிபாடு

ஈரோடு:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள ஆலுாத்துப்பாளையத்தில், மழை பெய்ய வேண்டி, நேற்று முன்தினம் இரவு மழைக்கஞ்சி சுமந்து ஊர்வலமாக சென்றனர். அதை தொடர்ந்து பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அழுதனர்.

பின் மழை இல்லாத கிராமத்தில் நாங்கள் வாழ மாட்டோம் என கோபித்து சென்றனர். ஊர் எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்தி, ் மழை விரைவில் பெய்யும் என்று, பிறர் சமாதானப்படுத்தி ஊருக்கு
அழைத்து வந்தனர்.

Advertisement