கராத்தே: 955 பேர் உற்சாகம்

சென்னை: சா - ஷியன் ஷிட்டோ ரியூ கராத்தே - டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், 28-வது தேசிய மற்றும் இந்தியா - இலங்கை சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, ஐ.சி.எப்., உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 55 வீரர் - வீராங்கனையரும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 900 பேரும் பங்கேற்றனர்.

பத்து, 13, 15 மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டோர் என, வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கட்டா மற்றும் குமிட் ஆகிய இரு பிரிவுகளிலும், போட்டியாளர்கள் அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement