வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், 11வது நாளாக நேற்று, ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு கருப்பு உடையில் வந்த துாய்மை பணியாளர்கள், வாயில் கருப்பு துணி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு பெண் துாய்மை பணியாளர், தன் மகனுடன் போராட்டத்தில் பங்கேற்றார்.

Advertisement