அறிவை செழுமையாக்கும் திருக்குறள்: மொழிபெயர்க்க உஸ்பெக் பல்கலைக்கு மோடி வேண்டுகோள்
-நமது நிருபர்-
திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொள்ளலாமே? திருக்குறள் அறிவை செழுமையாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேசியதாவது: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள், ஆன்மிகம், தத்துவம், வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தை கொண்டதாக திகழ்கிறது. வாழ்வின் அனைத்து வகையிலும் ஒரு உத்வேகத்தை அளித்து வருகிறது.
உங்கள் 80வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொள்ளலாமே? இது இங்குள்ள அறிவுச் செல்வத்தை உண்மையிலேயே செழுமைப்படுத்தும். மிகச் சிறந்த ஆற்றல் கொண்ட படைப்பான இதனுடன் நீங்கள் ஒரு நல்ல உறவை உணர்வீர்கள்.
தாஷ்கன்ட் பல்கலை வெறும் பட்டங்களைப் பெறும் ஒரு கல்வி நிறுவனம் மட்டுமல்ல; இது அறிவின் பரந்த கடலில் நம்மை முழுமையாக தயார்படுத்தி கொள்ள வாய்ப்பை வழங்கும், அர்ப்பணிப்புடன் கூடிய தேடலுக்கான ஒரு இடமாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
தென் மாவட்டங்களில் தமிழகத்தை தவிர வேறு எந்த ஒரு மாநிலமும் திராவிடம் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டுமே திராவிடத்தின் பெயரால் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், தமிழர் வழிபாடு ஆகிய அனைத்தும் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியை அறியாதவர்கள் கூட, உயரிய பதவியை அடையும் வாய்ப்பு இங்கு உள்ளது என்பது மிகப் பெரும் அவலம்.
பகவத்கீதை அங்கே இருக்கு போல.
அப்பாவி உன்னை பெத்தவங்க இன்னும் எப்படி உனக்கு சோறு போடுறாங்க
. இவரும் கன்டென்ட் கொடுத்துக்கிட்டே இருக்காரு ....
அய்யகோ ..... திராவிட மாடல் என்று பேசும் வந்தேறிகளுக்கு ஆ வா யில் காஷ்மீரி மிளகாயை வெச்சுட்டாரு .....
திராவிட தாய் தமிழ் மொழியில் இயற்றப்பட்ட திருக்குறள் உஸ்பெகிஸ்தான் வரை உலகப்புகழ் பெறுகிறதே உருட்டு வடமொழி சமஸ்கிருதமே சிறந்தது என்பவர்களுக்கு எரிச்சல் தான்
சொம்பு சுள்ளானுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம்
SULLAN உன் பேருக்கேற்ற படி நீ வளர வில்லையா அல்லது உன் மூளை வளரலையா?
உள்ளூரிலேயே தமிழை வளர்க்க முடியவில்லை. பள்ளியிறுதி தேர்வில் ஆண்டுக்கு 60000 பேர் தமிழில் ஃபெயில்.ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் 18 சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டுள்ளது தெரியுமா? . இந்தியாவுக்கு வெளியே ஹார்வார்டு உட்பட சுமார் 20 பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துகின்றன.
தமிழின் சிறப்பையும் வள்ளுவத்தின் மேன்மையையும் ஓட்டுக்காக அல்லாமல் உண்மையாகவே பேசுகிறாரே.அவரை வசைபாட முடியவில்லையே என்பது தான் சுள்ளான் பாய் அவர்கள் வயித்தெரிச்சல். வேணும்னா உருது மொழியும் அரபி மொழியும் சிறந்தது என்று அறிவிக்கச் சொல்வோம்.
உலகம் முழுவதும் தமிழையும் திருக்குறளையும் கொண்டுசேர்க்கும் பாரத பிரதமருக்கு தமிழனாக தலைவணங்குகிறேன்