அந்நியச் செலாவணி சேமிப்பு; ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்
புதுடில்லி: அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டியுள்ளது என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பொருளாதாரம் 7.8% என்ற விகிதத்தில் வளர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம், தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடுகளில் திருமணங்களை நடத்த வேண்டாம் என்று பிரதமர் ஏன் நம்மை அறிவுறுத்துகிறார்? இதற்கான விளக்கத்தை நான் அளிக்கிறேன்.
கிழக்கு ஆசிய நாடுகள் (ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் பின்னர் சீனா) அனைத்தும், விரைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் அதே வேளையில் அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டிய கட்டாயத்தையும் கொண்ட ஒரு காலகட்டத்தைக் கடந்து வந்தன.
நமது பொருளாதாரம் நல்ல வேகத்தில் வளர்ந்து வருகிறது; இருப்பினும், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் நாம் இன்னும் இறக்குமதியைச் சார்ந்தே இருக்கிறோம். உண்மையில், பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அந்தளவுக்கு எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப தேவையும் அதிகரிக்கிறது.
அந்த இறக்குமதிச் சார்பைச் சமன் செய்ய, நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது; தற்போது நமது ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், நமது ஏற்றுமதிப் பொருட்களுக்கும் கூட மேம்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படுகின்றன; இவற்றை நாம் இப்போதைக்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
இத்துறைகள் அனைத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறுவதற்கு நீண்ட காலம், பெரும்பாலும் பல ஆண்டுகள் தேவைப்படும். நாம் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம், ஆனால் நமக்கு இன்னும் கால அவகாசம் தேவை.
மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்வதற்கு கிழக்கு ஆசிய நாடுகள் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டன என்பதைப் பாருங்கள். அந்நியச் செலாவணியைச் சேமிக்கக் கடுமையாக உழைத்த அதே வேளையில், அவர்களின் பொருளாதாரங்களும் வேகமாக வளர்ந்து வந்தன. அதைத்தான் நமது அரசும் செய்ய முயற்சிக்கிறது.
அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களிலும் நாம் திறனை வளர்த்துக்கொண்டு, நாமே தொழில்நுட்பத்தை உருவாக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் எரிசக்தித் துறையில் தற்சார்பை எட்டிய பிறகு, அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது. வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் தேவைப்படும்.
வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்தின் சூழலைப் போன்றது இது. வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்ய அந்த நிறுவனம் தனது மூலதனத்தைச் சேமித்து வைக்க வேண்டியிருக்கும். அதேபோல, நமது நாடும் அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
தங்கம் இன்னும் சில வருடங்களில் மிக பெரிய சரிவை சந்திக்கும். தங்கத்தை வெளி நாட்டு பணத்தில் நாம் இறக்குமதி செய்கிறோம். அதேபோல வெளிநாட்டில் நடத்தப்படும் திருமணம் உள்நாட்டிற்கு பொருளாதாரத்திற்கு பயன் இல்லை. இதை முக்கிய இறக்குமதிக்கு பயன்படுத்தினால் நல்லது.
தமிழ்நாட்டு அரசியல் வியாதிகளுக்கு நேர்மையான எண்ணத்துடன் சிந்திக்கும் திறன் இல்லை .அவர்களுக்கு இருக்கும் மனநிலையெல்லாம் பணம் சம்பாதிப்பது மட்டுமே . அது அரசு சொத்தை ஆட்டயம் போடுவதாக இருக்கலாம் ,அல்லது ஊழலாக இருக்கலாம் ,கள்ள சாராயம் ,நல்ல சாராயமாக இருக்கலாம் ,அல்லது போதைப்பொருளை விற்பதாக கூட ருக்கலாம். இதில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் போட்டி .யர் அதிக திறமையோடு இந்த களவாணி வேலைகளை செயகின்றார்கலோ அவர்களுக்கு தான் அதிகாரபதவி ...இப்போதுதான் விழிப்புணர்வு வந்து மாற்றத்தை கொண்டுவந்திருக்கின்றார்கள் .இதுதான் முன்னேற்றத்தின் ஆரம்பமாக இருக்கும் .மாற்றத்திற்கான விழிப்புணர்வு எல்லாவழிகளிலும் பரப்பப்படவேண்டும் .
நம் நாட்டில் இல்லாத பொருட்களையோ, தொழில் நுணுக்கங்களையோ, இதர வசதிகளையோ வெளிநாட்டிலிருந்து பெறுவது தவறில்லை. அப்பொழுதுதான் நாடு முன்னேறும் ஆனால் ஒருமுறை வாங்கிய பொருட்களை, பயன்படுத்திய தொழில் நுட்பங்களை அடுத்த முறை நம் நாட்டிலேயே தயாரிக்க வேண்டுமென்ற உத்வேகம் இங்குள்ள அரசுக்கும் மக்களுக்கும் வேண்டும். அப்பொழுதுதான் இறக்குமதி குறையும் இந்தியா ஒரு அதிர்ஷ்டம் செய்த நாடு இங்கே உற்பத்தியாகும் பொருட்கள் இங்குள்ள மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே போதாது. இங்கு விற்கப்பட்டவை போக மிச்சமிருப்பதனை ஏற்றுமதி செய்யலாம்அதற்குத் தேவையான பணம் முதலீடு செய்ய அதனையும் அம்பானியும் டாடாவும் தேவை என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் அரசியல்வியாதிகள் பல்லாயிரம் கோடி சொத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் தமிழக அரசியல்வியாதிகளில் பெரும்பாலோர் ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள், குவாரி மற்றும் உற்பத்தித் துறைகளில் சொந்தத் தொழில் அல்லது பங்குகளைக் கொண்டுள்ளனர்.அவர்களால் சாரயத் தொழிற்சாலை இல்லாமல், வேறு ஏதேனுமொரு பொருள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவப்பட்டதா?
சுதேசி தயாரிப்புகளையே வாங்குங்கள் எனும் பிரச்சாரத்தை 1920லேயே துவக்கி விட்டார்கள். தற்சார்பு பொருளாதார கொள்கையை நேரு வாயளவில் பேசினார். இப்போ மோதி உள்நாட்டுத் தயாரிப்புகளை பயன்படுத்த வலியுறுத்தும் போது மட்டும் மேல்நாட்டு கார்பரேட், மிஷன்நரி கைக்கூலி ஆட்களுக்கு எரிகிறது.
உங்க கருத்து சில சொம்புகளுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே வெளியிடப்படும் என்ன பத்திரிக்கை எங்க கையில் இருக்கு நாங்க யாருக்கு சாதகமாக சொல்லணுமோ பேசவேணுமோ அதுக்குதான் இது ஏன்னா எங்களுக்கு கருத்து சுதந்திரம் முக்கியம்
இதை ஒரு 40 வருடம் முன்பு இந்த சிறந்த அறிவாளி யின் தாயாரோ தந்தையோ அல்லது தத்தானோ சொல்லி இருந்தால் இந்த இப்படி ஒரு அறிவாளி நமக்கு கிடைக்காமலே போய் இருக்கும்
பத்திரிக்கை தர்மம் நம் நாட்டில் மறைந்து 30 வருடம் ஆட்சி என்பதற்கு இதுவே சாட்சி , முன்னெல்லாம் பத்திரிக்கையில் செய்தி வந்தால் அதில் நண்பகத்தன்மையும் உறுதியும் இருக்கும் இப்போது பார்ப்பதே அரிதாக இருக்கு, முன்பு 90 சதவீயதாம் உண்மை இருக்கும் 10 சதவீதம் கற்பனைவளம் இருக்கும் இப்போது அது அப்படியே மாறி உள்ளது,
அப்படீன்னா உங்க அமைதி மார்க்க ஆட்கள் தற்கொலை வெ.. குண்டாக மாறி அப்பாவி மக்களை கொன்றார்கள் என்ற உண்மை 90% சதவீதமா அல்லது 10% சதவீதமா சொல்லுங்க தஞ்சை மன்னரே!
எல்லா ஊடகங்களையும் பணம் பதவி விளம்பரம் என்று திருட்டு த்ரவிட முதல் குடும்பம் தின்று தீர்த்தபோது நீங்க குஷ்கா சாப்ட்டுனு இருந்தீங்களா?
மொதல்ல திருட்டு த்ரவிஷன்களுக்கு சொம்பு தூங்குவத நிறுத்துங்க
தஞ்சை மன்னரே..அன்று பேச்சில் நாகரிகம் இருந்தது...இன்று திமுக பேச்சில் நாகரிகம் இருக்கா...
நீங்க அந்த மூணு பர்சன்ட் ஐ சேர்ந்தவரா இருக்கீங்க .... நாட்டைப்பத்தியும் அக்கறை எடுத்துக்குறீங்க ..... ஊழலுக்கு மரண தண்டனைகூடத் தரலாம்னு சொல்லியிருக்கீங்க .... இதனாலதான் மூர்க்கம், திராவிட மாடல் எல்லாம் உங்க குரூப்பைத் துடைத்தெறிய ஆர்வமா இருக்கோ >>
தர்மராஜ் தங்கரத்தினம் என்னோட கருது வெளியாகாமல் உங்களோட கருத்து குதறல் இருக்கு அப்போ நீங்க என்னோட முந்தய கருத்தை படிச்சிட்டிய வெளியாகும் முன்பே
சேமிப்பு எல்லாவகையுளும் தேவை.
அப்படியெல்லாம் நீங்க சொல்லப்படாது சொன்னிங்க என்றால் உங்க கருத்து இங்கே வெளியிடப்பட்டது - எங்களுக்கு கருத்து சுதந்திரம் முக்கியம்
ஸ்ரீதர் வேம்பு அவர்கள் சொல்வது போல் நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவது உண்மை. ஆனால் அந்த அளவிற்கு நாம் மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் கணிசமான அளவிற்கு நாம் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும். மேலும் நாட்டின் நலன்கருதி எந்தவொரு நல்ல திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தாலும் அதை வரவிடாமல் செய்வதற்கு என்றே சில அந்நிய சக்திகள் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி சுற்றிக் கொண்டிருக்கின்றன. பற்றாக்குறைக்கு இத்தாலி இளவரசரான ராகுல்காந்தியும் அவர்களை போராடச் சொல்லி தூண்டி விடுகிறார்.
உதாரணத்துக்கு,
சமுத்ரா மந்தன் என்ற இந்தியாவின் மிகப்பெரிய திட்டத்தைப் பார்ப்போம். இந்த மிகப்பெரிய Project ஐ அதானி நிறுவனம் ₹84,084 கோடிக்கு டெண்டர் எடுத்திருக்கிறது. அதுபற்றி சற்று விரிவான பார்வை: சமுத்ரா மந்தன் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டம் என்பது, இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை விரைவு படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய எரிசக்திப் பாதுகாப்புத் திட்டமாகும். இது எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட திட்டம் அல்ல. 2030 to 31 வரை மொத்த ஒதுக்கீடு ₹84,084 கோடி. ₹28,534 கோடி கடல்சார் நில அதிர்வுத் தரவுகளுக்காக ₹43,200 கோடி 60 ஆழ்கடல் மற்றும் அதிஆழ்கடல் ஆய்வுத் துளைகளுக்காக
₹10,000 கோடி பகிரப்பட்ட கடல்சார் உள்கட்டமைப்பிற்காக
₹2,000 கோடி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மண்டலங்களுக்காக! இந்தியா இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை பெருமளவில் சார்ந்துள்ளது. ஒவ்வொரு பெரிய உள்நாட்டு கண்டுபிடிப்பும் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும், அந்நிய செலாவணியைச் சேமிக்கவும், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சமுத்திர மந்தன் என்பது, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் எரிசக்தியை நிரந்தரமாகச் சார்ந்திருப்பதை விடுத்து, இந்தியாவின் சொந்த ஆழ்கடல்களை ஆராய்வதற்கான மிகப்பெரிய நிதி ஆதாரத்தை மேற்கொள்வதைப் பற்றியது. தொழில்துறை அளவிலான ஒரு தேசிய ஆய்வுத் திட்டத்தை, அதானிக்கான கொண்டு வந்த திட்டம் என்ற கதையாக மாற்றுவது, அந்தத் திட்டம் உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புறக்கணிக்கிறது. இது ஒரு நிறுவனத்தைப் பற்றியது மட்டுமல்ல! இந்தியாவின் சொந்த கடல் நீருக்கடியில் இந்தியாவின் எரிசக்தியை மேலும் கண்டறிவதைப் பற்றியதாகும் இந்தத் திட்டத்தை இங்குள்ள அந்நிய கைக்கூலிகளான Deep State
ன் ஆட்கள் நிறைவேற்ற விடுவார்களா என்பதுதான் கேள்விக்குறி?மேலும்
-
4 கடைகளில் பூட்டு உடைப்பு 6 பேட்டரிகள் திருட்டு
-
விழுப்புரத்தில் நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
-
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
-
கூலி தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை
-
எதிர்பார்ப்பு உள்ளாட்சிகளில் நியாயமான வார்டு வரையறை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு தேவை
-
பேனர் செயல்படுத்துங்க செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்கள் குற்றச் செயல்களை கண்காணிக்க தேவை