திருச்சூரில் லாரி மீது கார் மோதியது; தமிழக மாணவர்கள் 8 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த தமிழகத்தில் பதிவு செய்ய கார் (TN 59 DW 8299) லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.எம் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த யுவ சஞ்சித் மற்றும் சூர்யா, மதுரையை சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஷ்வா, சந்தோஷ், ஜோஸ்வா ஆகிய 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் 2 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்தது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
@block_P@
எச்சரிக்கை அவசியம்!
இந்த விபத்து நள்ளிரவு 11.45 மணியளவில் நிகழ்ந்து இருக்கிறது. இரவு பயணங்களால் அடுத்தடுத்து விபத்து நடக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்து நடை பெறும். இந்த விபத்து இரவு 8 மணிக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. block_P
வாசகர் கருத்து (15)
அப்பாவி - ,
05 செப்,2026 - 10:06 Report Abuse
கதி சக்தி. உலகத்தரத்துக்கு எட்டு வழி சாலை போட்டு லாரியை அதுலேயே நிறுத்தி மக்களை போட்டுத்தள்ளுவோம் ஹை. 0
0
Reply
Subramanian Muthu - ,இந்தியா
05 செப்,2026 - 09:33 Report Abuse
தேசிய நெடுந்சாலை ஓரங்களில் நிறுத்துவதை தடைசெய்யலாமே 0
0
Reply
skanda kumar - bangalore,இந்தியா
05 செப்,2026 - 09:31 Report Abuse
டாஸ்மாக் தமிழர்கள் டாஸ்மாக் காரணம்.? 0
0
Reply
Venkatesan P - Pondicherry,இந்தியா
05 செப்,2026 - 09:22 Report Abuse
இதை விட மோசமான சாலை வசதிகள் மற்றும் விபத்துகள் நடக்கிறது 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
05 செப்,2026 - 09:11 Report Abuse
திராவிட மாடல் படி, குடி, போதை உயிரை வாங்கி உள்ளது. 0
0
Reply
Aarbinms - Bangalorw,இந்தியா
05 செப்,2026 - 08:40 Report Abuse
உங்கள் பத்திரிகையில் நீங்கள் பல பல முறை எச்சரிக்கிறீர்கள் இரவு/அதிகாலை நேரத்தில் கார் மற்றும் டூ வீலர் பயணத்தை தவிருங்கள் என்று. கடும் சட்டத்தை நெடுஞ்சாலை துறை அமுல்படுத்த வேண்டும் 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05 செப்,2026 - 08:17 Report Abuse
யாருமே சட்ட திட்டங்களை மதிப்பதில்லை. இரவில் பார்க்கிங் லைட் அவசியம் ஆனால் யாருமே செய்வதில்லை. இரவில் பயணம் செய்வோர் தூக்க கலக்கத்தில் போகக்கூடாது. எங்காவது நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும். லேட்டாக போனால் ஒன்றும் ஆகாது. உயிர் போனால் திரும்ப வராது 0
0
Reply
Manikandan - ,இந்தியா
05 செப்,2026 - 07:47 Report Abuse
You dont know the real reason of the accident, still you commented about the boys who performed the pilgrimage from gruvayoor to kodugollur temple . 0
0
Reply
RG GHM - ,
05 செப்,2026 - 07:42 Report Abuse
அனைத்து கன ரக வாகனத்தின் பின்புறம் தடுப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் பின்னால் வரும் சிறிய வாகனம் மோதினலும் கோரமான நிகழ்வுகள் தடுக்க படும். அரசு இதை கட்டாயமாக்க வேண்டும். 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
05 செப்,2026 - 07:28 Report Abuse
ஐம்பது ஆண்டுகால சூப்பர் திருட்டு திமுக சுமார் திருட்டு அதிமுக இந்த இரண்டு கட்சிகளின் சாதனைகளில் இது போன்ற கேவலமான விபத்துக்களையும் சேர்த்துக் கொள்ளலாம். எல்லா மாணவர்களும் கண்டிப்பா போதையில் இருந்திருப்பானுங்க. 0
0
raju - ,
05 செப்,2026 - 08:42Report Abuse
ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல 0
0
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
05 செப்,2026 - 09:53Report Abuse
ஆன்மீக பயணம் சென்று இருப்பார்கள் குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் கோவிலுக்கு செல்பவர்கள் குடித்து விட்டு செல்வார்களா....??? தூக்கக்கலம் மற்றும் கவணக்குறைவால் ஏற்பட்ட விபத்தாகவே இருக்க வேண்டும்.....!!! 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘உயிரை காப்பாற்றிய சிட்டு குருவிகளுக்கு சரணாலயமான வீடு!’ ––––––––––––––
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!’ –––––––––----–––––––
-
வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு
-
சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்
-
சென்னை, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
-
கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி; ஸ்டாலின் வலியுறுத்தல்
Advertisement
Advertisement