சென்னை, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த வசூல் தொடர்பாக சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
களத்தில் தினமலர்!
திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
@block_P@
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ''ஐகோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டசபை கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே, முன்னாள் அமைச்சர் நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் தவெக அரசு மேற்கொண்டுள்ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டசபை எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டசபை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழக மக்கள் நன்கறிவர். இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. நேருவும், திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்'' என குறிப்பிட்டுள்ளார்.block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
நேரு வீட்டில் ரெய்டு; கொந்தளித்த ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பது என்ன; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஒன்றும் நடக்காது.
A detailed report has already been furnished 6 months back by the Enforcement Directorate
லஞ்ச ஒழிப்பு துறை, CBI , நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றம் உள்பட எதன்மீதும் நம்பிக்கை இல்லை.
ம்ம்ம்.. அப்படியே ரைடு முடிஞ்சதும் ...
அப்படியே நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் ....
ஒன்னும் செய்ய முடியாது ....எல்லாமே நாடகம் ...மக்களை திசைதிருப்பும் விளையாட்டு ...
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் .
19 இடங்களில் மட்டும் தானா. மிதி 200 இடங்கள் என்னவாயிரு. இவர்களை ஆண்டவனாலும் திருத்த முடியாது. இவர்கள் ஒழிந்தால் தான் நாடு உருப்படும். இவர்களுக்கு ஒட்டு போட்டவர்களை என்ன வென்று சொல்லுவது.
சோதனை நடக்கும் ஆனால் எதுவும் நடவடிக்கை இருக்குமா ?
இதெல்லாம் வேஸ்ட், புது ஆட்சி அமைந்து 3 மாதங்கள் முடிந்து இன்னும் யாரவது ஆவணங்களை வீட்டில் வைத்து ருப்பார்களா? waste money of DVAC team for Saturday over time
சரணம்
ஏற்கனவே விஞ்ஞான ஊழல் வித்தகர்கள். எல்லாவற்றையும் பத்திரமாக மறைத்ததுக்கப்புறம் ரெய்டு விட்டு என்ன பிரயோசனம்.
திருடிவிட்டு தப்பித்து வெளிநாட்டிற்க்கே ஓடிய பின் தனி படை அமைத்து திருடனை பிடிக்கும் தமிழ்நாடு போலீஸ்.மேலும்
-
மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்; தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; ஊழல்வாதிகளுக்கு கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சி பிறந்தநாள் இன்று: நினைவு கூர்ந்த முதல்வர் விஜய், ஸ்டாலின்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘உயிரை காப்பாற்றிய சிட்டு குருவிகளுக்கு சரணாலயமான வீடு!’ ––––––––––––––
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!’ –––––––––----–––––––
-
வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு