அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்: முதல்வர் விஜய்
சென்னை: அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் விஜய் காவலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை.
காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும்.
மக்களும் காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
நீதிமன்றம் போல் அதிகாரம் காவல்துறைக்கு இருக்கவேண்டும். இது அரசியல் நோக்கமுள்ள அரசுகிற்கு இருக்காது. தழிழக அரசை எடுத்துக்கொள்வோம்.
தலைமை அமைச்சர் பெயர் விஜய்... இப்போது பெயர் ஜோசப் விஜய். இவருடைய செயல்கள் மத சார்பு அற்றது என்று கூற இயலாது.
Sack& Punish All80% PowerMisusing MegaLooting AntiPeople Case
NEWS-VotePower Hungry SelfSaintMAFIAs& Vested FalseComplaintGangs And Rulers& StoogeOfficials. No Mercy Required in Nation& SupremePeoples Interestsமேலும்
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
-
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!
-
சொல்கிறார்கள்
-
உதயநிதிக்கு முதல்வர் விஜய் தக்க பதிலுரை அளிப்பார்; அமைச்சர் அருண்ராஜ் உறுதி