தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
சென்னை: தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நிலையில், தற்போது 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
அதன்படி, நவம்பர் 5ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதேசமயம், லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயன்றதால் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதி அடைந்தனர்.
நவம்பர் 6ல் வெள்ளிக் கிழமை பயணம் செய்ய இருப்பவர்கள், நாளை செப்., 7ம் தேதியில் காலை 8 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், நவ., 7ம் தேதி பயணம் மேற்கொள்ள, நாளை மறுநாள் செப் 8ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல் பண்டிகை முடித்து திரும்புவோர், செப்டம்பர் 10ம் தேதி முதல், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து (6)
ரயில்குமார் - ,
06 செப்,2026 - 13:44 Report Abuse
சர்வர் முடக்கம் னு சொல்லி கும்பல் கலைஞ்சு போனதும்? யாரையும் நம்ப முடில. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 செப்,2026 - 12:36 Report Abuse
நாங்கள் ராக்கெட் விடுவோம் சந்திரமண்டலத்துக்கு. சாதனை படைப்போம். ஆனால் ஒரு சர்வர் எங்களால் சரிவர செயல்படுத்த முடியவில்லை.
சோதனை அடைவோம். ராக்கெட் விடும் அளவுக்கு அறிவு உள்ள, விஞ்ஞானிகளால், தடையில்லா சர்வர்களை ஏன் தயாரிக்கமுடியவில்லை?
குற்றம் காண்கிறேன் என்று நினைக்காதீர்கள். எல்லாவற்றிலும் சாதனை படைக்கவேண்டும் என்று கருதுகிறேன், அவ்வளவுதான். 0
0
ஆரூர் ரங் - ,
06 செப்,2026 - 12:48Report Abuse
பல கோடி பயணிகளுக்கு ஒரே க்ஷண நேரத்தில் சேவை செய்யும் சர்வர்கள் உலகில் வேறெங்கும் உண்டா? தீபாவளிக்காக அதிக ரயில்களை விட்டால் சீசன் இல்லாத காலத்தில் அவற்றை என்ன செய்யலாம்? 0
0
Reply
Vasan - ,இந்தியா
06 செப்,2026 - 12:36 Report Abuse
இந்த வருடம் தீபாவளி பண்டிகை தீவிர வடகிழக்கு பருவ மழை காலத்தில் வருவதால், வானிலை, குறிப்பாக மழையின் குறுக்கீடு இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும். முந்தைய வாரம் புதன் முதல் அடுத்த வாரம் புதன் வரை, முழுவதுமாக விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும்,
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பர். பின்னர் வரும் சனிக்கிழமைகளில் ஈடு செய்யலாம். 0
0
Reply
GIRIRAJ - ,
06 செப்,2026 - 12:36 Report Abuse
பண்டிகை நாட்களுக்கு முன்பதிவு 60 நாட்கள் என்பதை 15 நாட்களாக மாற்ற வேண்டும். மேலும் பண்டிகை நாட்களுக்காக ஆன்லைன் முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்.
இதனால் பயணிகள் கொஞ்சம் சிரமம் அனுபவித்தாலும் எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும். வசதி இருப்பவர்கள் ஆன்லைன் மூலம் செய்கிறார்கள் இல்லாதவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். 0
0
Reply
GIRIRAJ - ,
06 செப்,2026 - 12:31 Report Abuse
இந்த நடைமுறை சரி இல்லை. இது ஒரு சூதாட்டம் போல் உள்ளது. ஒரே நாளில் எல்லாவற்றையும் விற்காமல் தினம் தினம் குறிப்பிட்ட இருக்கைகளை மட்டுமே பயணிகள் பெறுவதற்கு வசதியாக முன்பதிவு முறையை மாற்றி அமைக்க வேண்டும் அதனால் எல்லோருக்கும் கிடைக்கும். குறைந்தது ஒரு மாத காலத்திற்காகவாவது இந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். பயணிகளின் பணத்தை சுரண்டும் தத்க்கல் முறையை ஒழித்துக் கட்ட வேண்டும். 0
0
Reply
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement