மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
புதுச்சேரி: ரோடியார்பேட், கோலத்தார் தோப்பு வீதியை சேர்ந்தவர் வேலாயுதம், 46; கூலி தொழிலாளி. இவரது தாய், தந்தை இறந்து விட்டதால், திருமணம் செய்து கொள்ளாமல், தனியாக வசித்து வந்தார்.
குடிபழக்கம் உடைய வேலாயுதம், நேற்று முன்தினம் அதிக போதையில் வீட்டில் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடப்பதாக அவரது நண்பர் கல்யாணகுமாருக்கு தகவல் வந்தது. கல்யாணகுமார், வேலாயுதம் வீட்டிற்கு சென்று, மயங்கி கிடந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர் பரிசோதித்து, ஏற்கனவே வேலாயுதம் இறந்து விட்டதாக தெரிவித்தார். கல்யாணகுமார் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
-
போட்டி தேர்வுக்கு தயாராகலாம்
-
டில்லியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; உரிமையாளர் மீது வழக்கு
-
வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை; லண்டனில் மோகன் பாகவத் பேச்சு
-
புளோரிடாவில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சரக்கு விமானம்; 5 பேர் பலி
Advertisement
Advertisement