ரயிலில் 15 கிலோ குட்கா கடத்தல்

விருதுநகர்:விருதுநகர் வழியாக திருநெல்வேலி செல்லும் புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை எஸ்.ஐ., பெருமாள், ஏட்டுக்கள் மாரிதுரை, கருப்பசாமி, கான்ஸ்டபிள் விக்னேஷ் ஆகியோர் சோதனை செய்தனர். இதில் முன் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற சாக்கு பையில் 15 கிலோ குட்கா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement