டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடில்லி: மஹாராஷ்டிராவில் அரசியல்வாதிகள் டாக்டர்களை தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சுப்ரீம்கோர்ட் வலை தெரிவித்தது. அத்தகைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு மாநில அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சிகிச்சை தாமதமானதாகக் கூறி சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான கும்பல், பெண் மருத்துவர் உட்பட மருத்துவமனை ஊழியர்களைக் கடந்த ஜூலை மாதம் கொடூரமாகத் தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ரமேஷ் மத்ரேவுக்கு விசாரணை நீதிமன்றம் முதலில் ஜாமின் வழங்கியது.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ஜாமினுக்குத் தடை விதித்ததுடன் ரமேஷ் மத்ரேவைச் சரணடைய உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளுக்கு எதிராக ரமேஷ் மத்ரே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; அத்தகைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு மாநில அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அரசியல் பலம் மற்றும் பதவியை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
கும்பலாக வந்து தாக்கும் போது டாக்டர்கள் அடையும் மன உளைச்சலையும், அச்சத்தையும் நினைத்துப் பாருங்கள் என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர். பிறகு ரமேஷ் மத்ரே தரப்பு தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இதற்கிடையே ரமேஷ் மத்ரேவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை முழுமையாக ரத்து செய்யக் கோரி மஹாராஷ்டிர அரசு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கின் அடுத்த விசாரணையை வரும் செப்டம்பர் 28ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டாக்டர்களை மட்டுமா அரசியல்வாதிகள் தாக்குகிறார்கள்?
ஒரு காலத்தில் மருத்துவர்கள் வாழும் தெய்வமாக பார்க்கப்பட்டார்கள் ஆனால் இன்று எ...ன், சர்க்கரை நோய் இல்லாதவன் மருத்துவமனைக்கு ஏதாவது குறைபாடு தொடர்பாக சென்று மருந்து வாங்கி சாப்பிட்டால் சர்க்கரை ஆரம்பித்து விடும் கிட்னி காலி..... வயதுக்கு ஏற்ற டோஸ் தராமல் பரிசோதனை முறையில் அதிகமாக கொடுக்கிறார்கள் அதனால் வேறு உபாதைகள் ஏற்படுகிறது..... விபத்து சிகிச்சை அளிப்பதில் மருத்துவர் வக்கீல் கூட்டணி கொடிகட்டி பறக்கிறது.... கத்துக்குட்டி செவிலி களை வைத்துக் கொண்டு தினம் தினம் மரணம்.... மொத்தத்தில் அரசு மருத்துவமனைகள் பிரசவம் பார்க்க மட்டுமே லாயக்கு.... நாட்டு மக்களின் பணத்தை பிடுங்கி தின்பதில இந்த கருப்பு வெள்ளை கூட்டணி அபாரம்...
மாநில போலீஸ் மருத்துவ மனை, அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், போலீஸ் நிலையம் போன்ற பொது சொத்துகளை பாதுகாக்க, அரசு அதிகாரிகளுக்கு உதவ தான். தினமும் வாசலில் பணி நேரத்தில் நிற்க வேண்டும். அவர்களிடம் விசில், லத்தி, துப்பாக்கி எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் ஆபீஸ் வேலை உருவாக்கி பச்சை மையில் கையெழுத்து போட ஆர்வம். அரசியல் வாதிகள் பின் செல்ல 24 மணி நேரம் தயார். அரசியல் வாதிகள் பிடியில் இருந்து போலீஸ் விடுபட வேண்டும். அரசியல் வாதிகள் அடாவடிக்கு முக்கிய காரணம் இந்திய தேர்தல் ஆணையம் ஒழுங்கு படுத்த விரும்பவில்லை. நீதிமன்ற வழக்கு விசாரணை முறையில் நிழலாக மாறி தப்பி வருகிறார்கள். குறை நம்மிடம் அதிகம்.
தேவையே இல்லாத டெஸ்ட் களை செய்யச்சொல்லி COMMISION பெரும் டாக்டர்களை யார் தண்டிப்பார்.?
MR களிடம் அதிக சலுகைகளும் COMMISSIONம் பெற்றுக்கொண்டு நச்சு மிகுந்த மருந்துகளை PRESCRIBE செய்யும் டாக்டர்களை யார் தண்டிப்பார்?
Modern Hospitals அனைத்தும் Slaughter Houses ஆகிவிட்டன
MBBS டாக்டர்கள் பெரும்பாலும் Butcher கள் ஆக செயல்படுகின்றனர்
நீதிமன்றங்கள் இந்த கொடுமைகளையும் நிறுத்த வழி செய்யணும்
கைது செய்யப்பட்ட ரமேஷ் மத்ரேவுக்கு விசாரணை நீதிமன்றம் முதலில் ஜாமின் வழங்கியது ..... கீழ் கோர்ட்டு எப்படி ஜாமீன் கொடுக்கலாம் ன்னு மட்டும் கேட்டுறாதீங்க சுப்ரீம் சார் .....