சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர் கொடைக்கானல் அருவியில் பலி

கொடைக்கானல்: கொடைக்கானல் ஓராவி அருவியில் குளித்த திருநேசன், 27, என்ற சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர், நீரில் மூழ்கி பலியானார்.

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ், 29. சமீபத்தில் திருமணம் நடந்ததை அடுத்து, தேனிலவு கொண்டாட, மனைவியுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சென்றார். உடன், அவரது நண்பர் சென்னை தாவங்கரையைச் சேர்ந்த திருநேசன், 27, என்ற ஐ.டி., நிறுவன ஊழியரும் சென்றார்.

அங்குள்ள தம்பதியுடன் ஓராவி அருவிக்கு சென்ற திருநேசன், திடீரென தவறி விழுந்து நீரில் மூழ்கினார். அங்கிருந்தோர், தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

ஒன்றரை மணி நேர தேடுதலுக்கு பின், திருநேசன் சடலமாக மீட்கப்பட்டார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement