கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
வாஷிங்டன்: ''ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடையும்'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுடனான போரில் நாம் வெற்றி பெறும்போது, மற்ற அனைத்தும் வீழ்ச்சியடைவதைப் போலவே, குறிப்பாக அதை விடவும் அதிகமாக கச்சா எண்ணெய் விலைகளும் கடுமையாக வீழ்ச்சியடையும்.
ஒரு கேலன் (3.785 லிட்டர்) மூன்று டாலராக (இந்திய மதிப்பில் ஒரு டாலர் விலை ரூ.94.49) இருக்கும். ஆனால் இறுதியில், இரண்டு டாலருக்கும் கீழே சென்றுவிடும்; இவை அனைத்தும் நிச்சயமாக விரைவாக நடக்கும். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது. அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும் முக்கிய உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலைகள் உச்சத்தை எட்டின . பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய்க்கு 97 அமெரிக்க டாலராக உயர்ந்தன. இது கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் அதிகம் ஆகும். இந்த சூழலில் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
என்ன பிரயோஜனம் இங்க எங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்க போறாங்க . பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல
அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் புதிதாக விதித்த எல்லா வரிகளும் வாபஸ் பெறப்படும் என்று சொன்னால் தான் உலக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
சும்மா புலம்புவதை விட்டு , செய்து காட்டிவிட்டு சொல்லலாம்மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்
-
புதிய பொலிவுடன் 'பலேனோ'