பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!


புதுடில்லி: இந்திய வாகன விற்பனை வரலாற்றில் முதல்முறையாக, பெட்ரோல், டீசல் அல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் பயணியர் வாகனங்களின் விற்பனை, பெட்ரோல் வாகனங்களை பின்னுக்கு தள்ளியது.

நாட்டில் வாகனங்களின் சில்லரை விற்பனை கடந்த ஆக., மாதத்தில் 17.51 சதவீதம் அதிகரித்து, 24.23 லட்சம் வாகனங்களாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், இந்திய வாகன விற்பனை வரலாற்றில் முதல்முறையாக, மாற்று எரிபொருளில் இயங்கும் பயணியர் வாகனங்களின் விற்பனை, பெட்ரோல் வாகனங்களை பின்னுக்கு தள்ளி, புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

மொத்த விற்பனையில் பெட்ரோல் வாகனங்களின் பங்கு 40.85 சதவீதமாக இருந்த நிலையில், மாற்று எரிபொருள் வாகனங்களின் பங்கு 41.95 சதவீதமாக பதிவாகிஉள்ளது. இந்த தரவுகளை, வாகன வினியோகஸ்தர் சங்கமான 'படா' வெளியிட்டுள்ளது.

சிஎன்ஜியில் மாருதி முதலிடம்

* குறைந்த அளவில் செலவு காரணமாக சிஎன்ஜி பெட்ரோலுக்கு மிகப்பெரிய மாற்றாக உருவெடுத்துள்ளது. இதனால் சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது, அதே நேரத்தில் மின்சார வாகனங்கள் தொடர்ந்து அதிக விற்பனை நடந்து வருகிறது.

* மாருதி சுசுகி சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் விற்பனையில் 71% பங்குடன் ஆதிக்கம் செலுத்துகிறது, அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் மின்சார பயணிகள் வாகன விற்பனையில் 43% பங்குடன் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில், டீசல் கார்கள் விற்பனையில் 17.2% பங்கைக் கொண்டிருந்தன.

* இந்த மாற்றம் முக்கியமானது. சார்ஜிங் உள்கட்டமைப்பைச் சார்ந்திருக்காமல் சிறந்த செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் 'ஹைப்ரிட்' (hybrid) வாகனங்கள் வரவேற்பைப் பெறுகின்றன.

* இந்த மாற்றம் கார்களுக்கு அப்பாலும் காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் பயன்பாடு ஓராண்டுக்கு முன்பு 7.7% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 10.7% ஆக உயர்ந்தது.

* பண்டிகை காலம் அல்லாத ஒரு மாதத்தில் முதன்முறையாக 10% என்ற அளவை இது கடந்துள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் ஆரம்பக்கட்ட பயன்பாட்டைக் கடந்து, பொதுவான வாகனப் பயன்பாட்டுச் சந்தையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 65.3% ஆக இருந்தது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 56.6% ஆக இருந்த நிலையில் தற்போது வளர்ச்சி கண்டுள்ளது.

* வணிக வாகனங்களைப் பொறுத்தவரை, மிகக் குறைந்த அளவிலிருந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு 2.1 சதவீதத்தில் இருந்து, இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து 5.2 சதவீதம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.

* பயன்பாட்டுத் தேவை, விலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாகப் பல்வேறு வகையான வாகனத் தேர்வுகளை நுகர்வோர் அதிகளவில் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.


@block_G@

விலையை உயர்த்தியது மாருதி!

மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், மே மாதத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக, இந்த மாதம் சில குறிப்பிட்ட மாருதி சுஸுகி கார்களின் விலையை 20,000 ரூபாய் வரை உயர்த்தவுள்ளது.

கடந்த இரண்டு முறை போல் இல்லாமல், இந்த முறை குறிப்பிட்ட சில மாடல்களுக்கு மட்டுமே விலை மாற்றம் பொருந்தும். எந்தெந்த மாடல்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பதை நிறுவனம் வெளியிடவில்லை.

ஜூன் மாதத்தில் தனது வாகனங்களின் விலையை 30,000 ரூபாய் வரை உயர்த்திய மாருதி, அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும் 30,000 ரூபாய் வரை விலையை உயர்த்தியிருந்தது.

தொடர்ச்சியான பணவீக்க அழுத்தம் மற்றும் அதிகரித்த செலவுகள் ஆகியவையே இந்த விலை உயர்வுகளுக்குக் காரணமாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரித்த செலவுகள் லாபத்தையும் பாதித்துள்ளன.

நிகர விற்பனை 36% அதிகரித்து 49,959 கோடி ரூபாயாக இருந்தபோதிலும், மாருதியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 10.8% சரிந்து 3,352 கோடி ரூபாயாக உள்ளது.block_G

Advertisement