ஆதாரம் இருப்பதால் தான் முதல்வர் விஜய் பேசினார்; திமுகவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி
சென்னை: சர்க்காரியா கமிஷன் குறித்து முதல்வர் பேசியது தவறு இல்லை; ஆதாரம் இருப்பதால் தான் முதல்வர் விஜய் பேசினார் என திமுகவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள ஆதாரத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் பேசினார். அவர் விசாரணை மற்றும் நீதிமன்றத்தை பற்றி பேசவில்லை; சர்க்காரியா கமிஷன் குறித்து இந்த அவையிலேயே எல்லாம் இருக்கிறது. இதை தானே பேசினார். சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கருணாநிதி எங்கெல்லாம் பணம் வாங்கினார் என்பது குறித்து இருக்கிறது.
கொடுக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மிசா குறித்து நிறைய பேசப்பட்டுள்ளது. மிசா காலங்களில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் குறித்து வழக்கு கைது செய்யலாம். தேவையில்லாமல் பழையது எல்லாம் பேசி, நீங்கள் இன்னும் உங்கள் நிலை குறித்து தரம் தாழ்ந்து போய் கொண்டு இருக்கிறீர்கள்.
ஆபாச நதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் விஜய் அவர்களுக்கு கண்ணியாக எடுத்துரைத்தார். அதை குறைத்துக்கொள்ள வேண்டும். இதே மாதிரி கத்திக்கொண்டே இருந்தால் உங்கள் நிலை குறித்து வெளிவரும். நேரலையில் போய் கொண்டு இருக்கிறது. இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
திமுகவினர் அமளி
முதல்வர் விஜய் என்னிடம் முன்கூட்டியே ஆதாரத்தை காண்பித்தார். அவரது பேச்சில் எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார். உடனே அவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர்.
திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகருக்கு அனை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். பிறகு, ''திமுகவினர் அமைதியாக இருந்தால் பேச அனுமதி தருகிறேன்; மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்'' என சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
@block_Y@
என் முன்னால் நின்று கொண்டு, சூழ்ந்து கொண்டு அவையை நடத்த விடாமல் தடுத்து கொண்டு இருக்கும் எம்எல்ஏக்களை வெளியேற்றும் படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார். அமைதியாக போங்கள், அவை காவலர்கள் அமைதியான முறையில் வெளியேற்றும் படி ஜேசி பிரபாகர் வேண்டுகோள் விடுத்தார்.
block_Y
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டசபை இன்றைய கூட்டத்தொடர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நேரலை வீடியோ!
அமளி செய்த திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
உப்பு பெறாத விஷயத்திற்காக தினமும் சட்டசபையின் நேரமும் பணமும் வீணாகிறது இதில் நேரலை வேறு ஒரு தண்டச்செலவு. இரு புறமும் தரமற்றவர்களை தேர்ந்தெடுத்ததற்காக தமிழக மக்கள் வெட்கி தலை குனியும் நிலை நிச்சயம் வரும்.
விஜய் பேசிய விஷங்கள் ஏற்கனவே ஊர், உலகு நாறிய விஷயம். அது சரி என்ன சட்டபூர்வமான நடவடிக்கை, திராவிடத்தின் மேல் நடவடிக்கை எடுத்துள்ளது, விஜய் அரசு???. காரியம் தான் முக்கியம். குட்டையை குழப்பிவிட்டுட்டு போவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. நிர்மல், உதய் பேசுவது ஆபாச நதியாக இல்லை, ஆபாச சாக்கடையை ஓடுகிறது.
ஆதாரம் இருக்கான்னு தைரியமாக தேய்க்கும் போதே தெரியவில்லையா.....????? இவர்கள் தான் என்று சொல்லமுடியாது அளவுக்கு...... திரு. சோ அவர்கள் சொன்னமாதிரி விஞ்ஞான ஊழல்......
ஆதாரம் இருந்தால் எதற்கு பேசி கொண்டு இருக்கிறீர்கள், செயல்படுங்கள் அதற்கு காரணமானவர்களை நிரந்தரமாக சிறையில் அடையுங்கள். வருகின்ற தேர்தல் கருதி நீங்கள் வெற்றி பெற அவர்கள் மீது பழி போடுவதாக கருதுகிறேன் அல்லது அவர்களை மிரட்டி உங்களை சட்ட சபையில் கேள்வி கேட்காமல் இருக்க செய்வதற்காக பேசுவதாக உணர்கிறேன்.
இப்படி டவுசர்வாலா முட்டுக்கொடுக்கும்படி ஆகிவிட்டதே?
திமுக மீதான சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அன்றைய காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மேலும் அமலாக்க துறை அறிக்கை நீதிமன்றத்தில் இருப்பதால், விகிதாசார அடிப்படையில் திமுக ஆட்சியில் பெற்ற பார்ட்டி ஃபண்ட், இல்லை என்றாகி விடுமா என்ன? தமிழகத்தை வெள்ளையர் ஏகாதிபத்திய அரசு சுரண்டியதை விட, கொள்ளையர் ஆட்சி சுரண்டியதே அதிகம்!!
அம்மா ஊழல் வழக்கில் ₹100 கோடி அபராதம் விதிக்கப் பட்ட அதிமுக ஊழல் மற்றும் மூன்று பேர் 4 வருட சிறை மற்றும் ₹10 கோடி அபராதம் கூட .. இதெல்லாம் தெரிந்தே ஊழல் கட்சி விஜயபாஸ்கர் செங்கோட்டை வேலுமணி இவர்கள் ஆதரவு ஆட்சி எப்படி ஊழல் ஒழிப்பு ? ஒளிக்க வா ? :
சபாநாயகர் பிரபாகர் திறமையாக தமிழக சட்டசபையை ஒத்தி வைக்காமல் நேரத்தை வீணடிக்காமல் நடத்துகிறார். இது போல லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா திறமையாக செயல்படாமல் அடிக்கடி சபையை ஒத்தி வைக்கிறார். அதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
ஆதாரம் இருந்தால் அப்போது சர்க்காரியா கமிஷன் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை ?
ஆதாரம் இல்லை அதுவே காரணம்
பழைய கதை நாட்டிற்கு தேவையில்லை
உங்கள் ஆட்சியில் தினமும் நடக்கும் குற்றங்களுக்கு
சட்டம் ஒழுங்கு காப்பற்ற நடவடிக்கை எடுக்க பாருங்கள்
சொத்து மதிப்பில் உலகத்தின் முதல் பத்து குடும்பங்களில் ஒன்றாக இருக்கும்போது உங்களை மட்டும் இரு நூறு ரூபாய்க்கு இல்ல எவரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கும் சக்தி உள்ள குடும்பம். அதனால் தான் நிதி அமைச்சர் PTR சொன்னாலும் கொள்ளையை சற்றும் குறைக்காமல் குடும்பம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
முருகன். அவை எல்லாம் மக்கள் தெரிந்து கொள்ளாட்டும்...அப்போதான் திருட்டு திமுகவிற்கு மக்கள் அடி பலமாக விழும்
முருகன். உண்மைய சொன்னா
இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் லஞ்சம் டெண்டர் கமிஷன் இவைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
அராஜகத்தில் ஈடுபடும் திமுக எம்எல்ஏகளுக்கு வெட்டி சம்பளம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செல்கிறது வருத்தம் அளிக்கிறது