மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்தது நெல்லை கோர்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சின்னகுட்டி என்பவருக்கு தூக்கு தண்டனை, முனீஸ்வரனுக்கு 13 ஆண்டு சிறை, முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, சின்னகுட்டி, முனீஸ்வரன், முருகேசன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு சார்பில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சின்னகுட்டிக்கு தூக்குத் தண்டனை, முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை, முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று (செப் 08) தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் ஒருவருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற இருவருக்கு நீண்டகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
ஒரே குற்றத்துக்கு மூன்று பேருக்கு மூன்று விதமான தண்டனை எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது ஆச்சரியம்
நிச்சயமாக தூக்கு கிடையாது என்பது ஜட்ஜ் அய்யாவுக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த ச்சும்மானாச்சுக்கும் தூக்கு தண்டனை ?
பொது இடத்தில அனைவரும் பார்க்கும்படி கட்டி வைத்து பின்புறம் தோல் உரிந்து வரும் அளவுக்கு அடி கொடுத்து , பின்னே என்கவுண்டர் செய்ய வேண்டும்.
மூவரையும் ஓடவிட்டு என்கவுன்ட்டர் செய்துவிடுங்கள்..
அந்த என்கவுண்டரை இவங்களையெல்லாம் புடிச்சு அன்னிக்கு செஞ்சிருக்கனும்.
இவர்களுக்கு எந்த கோர்ட்டிலும் மன்னிப்பு வழங்க கூடாது. மரணம் ஒன்றே இவர்களுக்கு தண்டனையாக இருக்க வேண்டும்.
உடனே தூக்கில் போடுங்க..ஆனா செய்ய மாட்டாங்க...20 வருஷம் மேல் மிகுந்த.முறையீட்டில் கிடப்பில் போட்டு விடுவாங்க..அப்பறம் என்ன ஏதோ மருத்துவ காரணங்களை காட்டி விடுதலை செய்வாங்க...இது தான் இந்தியா...கேவலமான சட்டங்கள்.க
100% உண்மெய்மேலும்
-
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களை கூறாமல் பாஜவை எதிர்க்க முடியுமா? திமுகவுக்கு ஸ்ரீதர் வேம்பு கேள்வி
-
அணைகள் நீர்மட்டம்
-
மாண்போடு நடக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நடக்கிறது சட்டசபை; ஸ்டாலின் பேட்டி
-
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… அமைதி காத்த இபிஎஸ்; ஆத்திரத்துடன் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்!
-
100 நாளில் 904 ரெய்டு, விதி மீறிய 322 ஹோட்டல் மூடல்; தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு துக்காராம்
-
தமிழக இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவிப்பு