என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… அமைதி காத்த இபிஎஸ்; ஆத்திரத்துடன் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்!
சென்னை: சட்டசபையில் திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்ட போதும் அமைதி காத்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்க்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்ட போது அமைதி காத்து, நடப்பவைகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் முதல்வர் இபிஎஸ்க்கு அவையில் சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.
அதேபோல், த.வெ.க.வினர் நீங்களும் அமைதி காத்தீர்கள்.. இது தான் உங்கள் தலைவர் உங்களுக்கு கற்று கொடுத்த நல்ல பண்பு என்று கருதி பாராட்டுகிறேன் என சபாநாயகர் கூறினார்.
அவை மாண்பை குறைப்பதா?
மேலும் சபாநாயகர் பிரபாகர் கூறியதாவது: உங்கள் கட்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சியை வழங்கி உள்ளது என்பதை பார்க்கிறேன்; சட்டசபையின் மாண்பை குறைக்கின்ற பணியில் எப்படி எல்லாம் ஈடுபட வேண்டும் என பயிற்சியை பெற்றுக்கொண்டு திமுக எம்எல்ஏக்கள் வந்துள்ளீர்கள்.
எனக்கு லோ பிரஷர் என்னை ஓய்வெடுக்க டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அதையும் மீறி முதல்வர் உரையின் போது நாம் இருக்க வேண்டுமே என்று வந்தேன். நல்ல வேலை முதல்வர் நடந்து கொண்ட முறை மருத்துவர் இல்லாமலேயே எனக்கு சிகிச்சை கிடைத்தது. பிரஷர் ஏறி விட்டது, என்றார்.
வாசகர் கருத்து (4)
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
08 செப்,2026 - 13:33 Report Abuse
ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் அவரையும் ஒரு கடி கடிக்குமே. ஏன்னா அவரும் பார்ட்டி ஃபண்ட் வாங்கியிருப்பாரே. 0
0
Reply
Varadharajan Srinivasan - hosur,இந்தியா
08 செப்,2026 - 13:24 Report Abuse
ஒரே குட்டையில் ஊறிய திராவிட மட்டைகள். 0
0
Reply
தேவதாஸ் புனே - ,
08 செப்,2026 - 13:06 Report Abuse
அவருக்கு எது நல்லதோ.....அதை செய்கிறார்......
திமுக விற்க்கு ஆதரவாக போனாலும் பிரச்சினை, எதிராக பேசினாலும் பிரச்சினை...... 0
0
Reply
manian - ,
08 செப்,2026 - 12:57 Report Abuse
dmk is gowrava mahasabha 0
0
Reply
மேலும்
-
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களை கூறாமல் பாஜவை எதிர்க்க முடியுமா? திமுகவுக்கு ஸ்ரீதர் வேம்பு கேள்வி
-
அணைகள் நீர்மட்டம்
-
மாண்போடு நடக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நடக்கிறது சட்டசபை; ஸ்டாலின் பேட்டி
-
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்தது நெல்லை கோர்ட்
-
100 நாளில் 904 ரெய்டு, விதி மீறிய 322 ஹோட்டல் மூடல்; தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு துக்காராம்
-
தமிழக இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவிப்பு
Advertisement
Advertisement