பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் மாதா சன்னதி தெருவை சேர்ந்த ராஜேந்திர பெருமாள், 47, கேபிள் 'டிவி'ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இப்பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் 35 வயது பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இது குறித் து அந்த பெண் டவுன் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அழைத்து எச்சரித்து அனுப்பினர். அதன்பின்னும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சம்மதிக்காவிட்டால் மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து ராஜேந்திர பெருமாளை போலீசார் கைது செய்தனர்.

Advertisement