காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு 'கிவ் அண்டு டேக் பாலிசி'யே!



திருச்சி : மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, பெங்களூரில் இருந்து தனி விமானம் வாயிலாக நேற்று திருச்சி வந்தார்.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றவர், மூலவர் சன்னிதியில் பெருமாளையும், தாயார் சன்னிதியில் நாச்சியாரையும் தரிசனம் செய்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:



உரிய காலத்தில் மழை பெய்யும் போது, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது என்பதை தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது. 'கிவ் அண்டு டேக் பாலிசி' தான் தீர்வாக இருக்க முடியும். இரண்டு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement