ஹீலியம் பலுானில் வானில் பறந்த 500 கிராம் சிறிய ரக செயற்கைகோள்


ஹீலியம் பலுானில் வானில் பறந்த
500 கிராம் சிறிய ரக செயற்கைகோள்
திருவண்ணாமலை, அக். 1-
சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி' கல்லுாரி'யை சேர்ந்த, 42 பேர் அடங்கிய மாணவ, மாணவியர் குழுவினர், 500 கிராம் எடையில், 25,000 ரூபாய் மதிப்பீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, சிறிய ரக செயற்கை கோளை, ஹீலியம் பலுான் மூலம் வானில் பறக்க விட்டனர்.
'சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (சி.ஐ.டி) கல்லுாரி'யை சேர்ந்த, 42 மாணவ, மாணவியர் அடங்கிய குழுவினர், குறைந்த செலவில் செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்தில், காற்றின் ஈரப்பதம், தட்பவெட்பநிலையை கண்டறிய, 25,000 ரூபாய் செலவில் தயாரித்த, 500 கிராம் கொண்ட சிறிய ரக செயற்கை கோளை கண்டுபிடித்து அதை, ஹீலியம் பலுான் மூலம் வானில் பறக்க விடும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது.
இந்த பலுான், 20 கி.மீ., உயரம் வரை பறக்கும். அப்போது, அதிலுள்ள செயற்கை கோள் தொடர்ந்து, 3 மணி நேரம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பும். மேலும், காற்றில் உள்ள ஈரப்பதம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றை கண்டறியும். சி.ஐ.டி., கல்லுாரி மாணவர்களின் இந்த முயற்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

Advertisement