சிவாலயங்களில் பிரதோஷ விழா

நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜை , அலங்கார ம், தீபாராதனை நடந்தது. செண்பகவல்லி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெள்ளிக்கவசம் சாத்த சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. அங்குள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.

கோபால்பட்டி: கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயில் , சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய தீபாராதனை , அன்னதானம் நடந்தது. வேம்பார்பட்டி குரு முத்தீஸ்வரர் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், தவசிமடை சிவன் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.

Advertisement