ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்கியது ஐகோர்ட்; தமிழக அரசுக்கு குட்டு
சென்னை: தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது.
மேலும், கோர்ட்டின் பொறுமையை சோதிக்க வேண்டாம், தி.மு.க., பவள விழாவுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்டு உள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு எடுத்து இன்று தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந் நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 42 இடங்களுடன் கூடுதலாக மேலும் 10 இடங்களுக்கு அனுமதி தரப்படுவதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம் வருமாறு; குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, கொள்கை மாறுபாடு கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது.
நிபந்தனைகளுடன் 6 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 58 இடங்களில் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்த புதிய நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (24)
raja - Cotonou,இந்தியா
01 அக்,2024 - 16:21 Report Abuse
சவுக்கடி கொடுத்தாலும் ஒட்டு பிச்சை காக திருந்த மாட்டான் இந்த ஒன்கொள் திருட்டு திராவிட தெலுங்கன் .....
0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
01 அக்,2024 - 16:07 Report Abuse
அய்யா சோழநாட்டாரே ஆர் எஸ் எஸ் பாரதம் முழுவதும் விஜயதசமி அன்று ஊர்வலம் நடத்துகின்றது. எங்கும் பிரச்சினை இல்லை. விடியாத ஆட்சிக்குத்தான் பிரச்சினை.
0
0
Reply
Kalyanaraman - Chennai,இந்தியா
01 அக்,2024 - 15:18 Report Abuse
எங்கிருந்து-எப்படி அழுத்தம் வந்தாலும் சட்டத்தின் பார்வையே தனது பார்வையாக கொண்ட நீதிபதி.
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
01 அக்,2024 - 15:05 Report Abuse
தமிழக ஆர். எஸ் எஸ் இதை சட்ட ரீதியாக இதை அணுகியது சரி என்றாலும் தலைமையிடமாக இருக்கும் நாக்பூர் இதை அரசியல் ரீதியாக அணுகி திருட்டு திராவிட கட்சியை வழிக்கு கொண்டு வரும் வேலையை ஏன் இன்னமும் செய்யாமல் இருக்கிறது என்பது புரியாத புதிர் ....
0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
01 அக்,2024 - 14:52 Report Abuse
அரசுக்கு எதிராக எவ்வளவு. .....டி தீர்ப்புகள் கொடுத்தாலும் திருந்தமுடியாத ஒரே மாடல் இந்த 1957 வருட மோரீஸ் மைனர் மாடல்தான்
0
0
Reply
Vaduvooraan - Chennai,இந்தியா
01 அக்,2024 - 14:47 Report Abuse
சந்துரு மாதிரி ஒருத்தர் இருந்தால், இந்த ஜெயச்சந்திரன் மாதிரியும் சிலர் இருக்காங்க தெய்வம் இருக்கு குமாரு
0
0
Reply
Bala - chennai,இந்தியா
01 அக்,2024 - 14:33 Report Abuse
இது குட்டு இல்லை. பளார்
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
01 அக்,2024 - 14:21 Report Abuse
கொள்கை மாறுபாடு கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி என்று கூட திமுகவின் காவல்துறை அனுமதி மறுக்க காரணம் சொல்லியிருக்கு ..... அதாவது சிலிண்டர் தான் வெடித்தது என்று சொன்ன டிப்பார்ட்டுமெண்ட்டு .....
0
0
Reply
K Veerappan - Madurai,இந்தியா
01 அக்,2024 - 14:18 Report Abuse
நீதிமன்றம் மற்றும் நீதிபதியின் நேரம் வீணாகிப் போனதுதான் மிச்சம். ஒவ்வொரு தடவையும் போலீஸும் தமிழக அரசும் ரூம் போட்டு யோசித்து அனுமதி மறுப்பது , பிறகு கோர்ட் அனுமதி வழங்குவது , இது எல்லாம் தேவையா ? நல்ல வேளை . கோர்ட் இனிமேல் இதுபோல் அனுமதி மறுக்க கூடாது என்று சொல்லி இருப்பது கொஞ்சம் ஆறுதல்.
0
0
Reply
S.Bala - tamilnadu,இந்தியா
01 அக்,2024 - 14:08 Report Abuse
நாம் இந்தியாவில் தான் வாழ்கிறோமா அல்லது வேறு மத நாட்டில் வாழ்கிறோமா ? எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தை நாடும் சூழல் உள்ளது .
0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement