1,628 விளம்பர பலகைகள் அகற்றம்

சென்னை, அக். 2-

சென்னையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட, 1,628 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன.

சென்னை மாநகராட்சியில், சட்டவிரோதமாக விளம்பர பதாகைகள் அமைப்பது அதிகரித்து வருகிறது.

பருவமழையை முன்னிட்டு பலத்த காற்றடிக்கும் போது, பதாகைகள் விழுந்து உயிர் சேதம், காயம் உள்ளிட்ட விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளது.

இதனால், முறையான அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அமைத்த, 1,311 விளம்பர பலகைகள் மற்றும் 317 விளம்பர பதாகைகள் என, மொத்தம், 1,628 எண்ணிக்கையில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன.

இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில், 529 விளம்பர பலகைகளும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 6 விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement