பெண் அதிகாரி 'அதிரடி' கேண்டீனுக்கு மூடுவிழா

மாவட்ட மத்திய வங்கியின் வளாகத்தில், பெண்களால் கேண்டீன் நடத்தப்பட்டு வந்தது. மதிய உணவு, டீ, ஸ்னாக்ஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கூட்டுறவு துறை சம்மந்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், வங்கி வாடிக்கையாளர்கள் கேண்டீன் சென்று இளைப்பாறி வந்தனர்.

கூட்டுறவு துறை சார்ந்த பல கூட்டங்களுக்கும் இங்கிருந்து டீ மற்றும் ஸ்னாக்ஸ் சப்ளை செய்யப்பட்டது.

இந்நிலையில், கூட்டுறவுத்துறையில் பெண் அதிகாரி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அதில் ஒன்றாக, வங்கி வளாகத்தில் இயங்கி வந்த கேன்டீனுக்கு மூடு விழா நடத்தப்பட்டது. இதனால் வங்கி ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் டீ குடிக்க வெகுதுாரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அலுவலக பணிகள் பாதித்து வருகிறது.

இதையறிந்த கூட்டுறவு தொழிற்சங்கத்தினர் மீண்டும் கேண்டீனை திறக்க, பெண் அதிகாரியிடம் முறையிட்டனர். அவர் ஏற்க மறுத்ததால், அமைச்சர் வரையில் முறையிட முடிவு செய்துள்ளனர்.

Advertisement