காப்பர் கம்பி திருட்டு வழக்கில் ஒருவர் கைது
வானுார் : வானுார் அருகே தனியார் நிறுவனத்தில் காப்பர் கம்பிகளை திருடிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் ஒழிந்தியாம்பட்டு சந்திப்பில் ஜி.டி.,எலக்ரானிக் இந்தியா என்ற தனியார் நிறுவனம் உள்ளது.
இங்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 341 கிலோ காப்பர் கம்பிகள் திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த விநாயகபுரம், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜூ, 45; என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement