15 ஆண்டாக சாலையின்றி மிட்னமில்லிவாசிகள் தவிப்பு

ஆவடி, ஆவடி மாநகராட்சி, மிட்னமல்லி மூன்றாவது வார்டு, அரசினர் உயர்நிலைப்பள்ளி சாலை, செங்காளி அம்மன் கோவில் தெருவில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் மண் தரையாக உள்ளது. இதனால், மழையில் சாலை சேறும் சகதியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக, பகுதிவாசிகள் வாகனங்கள் இயக்க முடிவதில்லை. ஏன் நடப்பதற்கே முடிவதில்லை என, பகுதிவசிகள் தெரிவிக்கின்றனர். மழைக்காலத்தில் முட்டிக்கு மேல் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறி வருகிறது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், அங்கு சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement