கணவர் மாயம் மனைவி புகார்
கடலுார் : கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புவனகிரி அடுத்த எறும்பூரை சேர்ந்த நாராயணன் மகன் முருகன், 55; மன நலம் பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி பிரேமலதா 49; முருகன் மனநலம் பாதிப்பு சிகிச்சைக்காக கடலுார் அடுத்த கூத்தப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்து வந்தார். முருகன் திடீரென வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.
இது குறித்து மனைவி பிரேமலதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement